“இது எதார்த்தம் ப்ரபா.மனசாட்சியோட சொல்லு கடந்த அஞ்சு பத்து வருஷத்தில் எத்தனை முறை என் நினைப்பு வந்திருக்கும்.”
“நினைத்த பொழுதுகள் சில தான் செல்வி ஆனால் உன்னை மறக்கவே முடியலை.உன் தொடர்புக்காக நெட் எல்லாம் தேடினேன்.எங்கயும் நீ இல்லை.”
சிரித்தாள்.
“நான் அந்த மாதிரி சமூக தளங்களில் இல்லை ப்ரபா.நான் அந்த நிகழ்சமமான வாழ்க்கை வாழ விரும்பலை”
“ஏன் அப்படி சொல்ற.எத்தனை நண்பர்கள் திரும்ப கிடைச்சாங்க தெரியுமா.எத்தனை புது நண்பர்கள் தெரியுமா”
“ஓ..அதில் எத்தனை பேரை நேரில் சந்திச்சிருக்க ப்ரபா…எத்தனை பேர் கூட தினமும் அரைமணி செலவு பண்ற ப்ரபா.எத்தனை நண்பர்கள் சுகதுக்கம் உன்னை உண்மையா நெகிழ வைக்குது ப்ரபா…எத்தனை நண்பர்கள் பிறந்தநாள் அன்னைக்கு பேசிருப்ப”
உண்மையில் இதற்கு பதில் இல்லை தான் என்னிடம்.விழித்தேன்.
“அதை எல்லாம் விடு தினமும் உன் கூடவே நீ எத்தனை நேரம் செலவு பண்ணிருப்ப.இந்த உலகத்திலேயே உனக்கு நெருக்கமான உன்னிடமே நீ தொலைவா போகனுமா?.இன்டர்நெட் நிறைய கொடுக்குது.ஆனால் அது நம் மேன்மைக்கு தானே இருக்கனும் நம்மை தொலைப்பதற்கா?”
எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து நிற்பதாக தோன்றியது எனக்கு.
நீண்ட மௌனம்.
“ப்ரபா என்ன ஒன்னும் பேசலை நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா”
“இல்லை செல்வி….நீ சொன்னது என்னை பேச்சை அடக்கிடுச்சு.வாழ்க்கையில் எங்க இருக்கோம் என்ன பண்றோம்ன்னு தெரியலை புரியலை”
இப்போதும் புன்னகைத்தாள்.
“ப்ரபா இந்த மனித வாழ்க்கை மிக சிறிது.இதுல போட்டி போடறது எதை நோக்கின்னு சிந்திச்சு பாரேன்.சீக்கிரம் வாழனும்ன்னு நினைக்கிறது சீக்கிரம் முடிவு நோக்கின்னு படலை.அது கோமாளித்தனமா இல்ல.”
உண்மையில் எனக்கு அப்படி தான் இருந்தது.தலை அசைத்தேன்.
“ஒவ்வொரு நாளும் ஒரு அழகு.ஒவ்வொரு நேரமும்ஒரு புதையல் நமக்கு.அதை அனுபவிச்சு …சுகமோ துக்கமோ முழுசா அனுபவிச்சு வாழலாம் இல்ல.”