தங்கள் இளம்வயது சென்றுவர தாங்கள் வளர்ந்த தங்களை வளர்த்த ஊரை பழைய நினைவுகளை மீண்டும் சுவாசிக்க முடிவெடுத்தனர்.
இருவரும் பேசுவதை கதவருகில் கேட்டக்கொண்டிருந்த கோதை கையிலிருந்த கடித்ததை முத்தமிட்டு
“அம்மா நீ சொன்னதை செஞ்சிட்டேன்.இனி நீ பார்த்துக்கோ.மிஸ் யூ மா”கண்கள் பனித்தது.
காலை சூரியன் உச்சி தொட ஏனோ அமைதியில்லாமல் நடந்துக்கொண்டிருந்தார் இராஜசேகர்.
“என்னாச்சு பா.என்ன பதட்டம்”கேசவன்
“ஶ்ரீயும் மாதுவும் ஆளைக்காணோம்.ரொம்ப நேரமாச்சே.கவலௌயா இருக்கு.நீ போயி பாரேன்”
“சரியா இருக்கு பா நீ பேசறது.அண்ணா எங்கண்ணு தேடுவான்.அவங்க எனென குழந்தையா.அதுவும் இது அவங்க வளர்ந்த ஊரு.கவலயை விடுங்க”கோதை
இப்படி அவர் கலவலைபட இவர்கள் தங்கள் பள்ளகமைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
“போதும் மாது முடியலை.மூச்சு வாங்குது.வயசாயிடுச்சு”
“ஆமா வெயில் வேற ஏறுது.கரறுத்து போயிடும் என் தங்கம்ன்னு சொல்லுவா அம்மா..அம்மா.அம்மா”
வீட்டில் காந்திருக்க அம்மா இல்லாததை உணர்ந்தான்.கண்கள் குளமாகின.அவனை அணைத துக்கொண்டு தேற்றினான் ஶ்ரீ.போகும் வழியில் அண்ணாச்சி கடையில் குளிர்பானம் வாங்க நின்றனர்.
“என்ன கண்ணுங்களா நல்லா இருக்கீங்களா உங்கம்மாவுக்கு உங்க நினைப்பு தான் எப்பவும்.முநதினநாள் கூட சாயங்காலம் என்கிட்டதான் முட்டாய்லாம்வாங்கினாங்க.அப்பப்போ இப்படிதான் வாங்கிதெரு பசங்களுக்கு எல்லாம் கொடுப்பாங்க.மகராசி.எவ்வளவு தன்மை எவ்வளவு பொறுமை.எப்பவும் சிரிச்ச முகம்.அவங்க இல்லைங்கறதே நம்ப முடியலை தம்பி”விசும்பினார்.
அங்கு வந்த பொன்னம்மா”அண்ணாச்சிஎன்னயிது புள்ளௌங்களுக்கு ஆறுதல் சொல்லாம”
“தப்பா ஒண்ணும்சொல்லியே.அவங்க இந்த ஊருக்கே மவராசி தான.முந்தநாள் பார்த்திருக்கேன் அடுத்த நாள் இல்லைன்னா ஏத்துக்க முடியலையே.ஏதோ செய்யுதம்மா”
“இருகட்டும் அண்ணாச்சி அம்மா பத்தி பேச்செல்லாம் எங்களுக்கு வேணும் தான்”மாதவன்.
“அந்தம்மா பெத்த மவராசனுங்க தானே…கதை கதையா சொல்லுவோம் பா நாங்க.என் உணவகத்துல ஒருநாள் காசில்லாம சாப்பிட மாட்டாங்க.ஆனா நிறையகுறிப்பு சொல்லி