“ஶ்ரீ மாது உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா”
“எதுவாயிருந்தாலும் சொல்லு நான் வெளியே போகனும்”
“சரி நம்ம அம்மா எனக்கே ஒரு கடிதம் எழுதியிருககா”
தன் அம்மா வை அவன் உரிமை கொண்டாடுவது ஶ்ரீக்கு சுரீர் என்றது.
“எப்போ ..என்ன எழுதியிருக்கா”
“பொதுவா மளிகை நான் தான் அம்மாக்கு எடுத்துவச்சு தருவேன்.நேற்று வைக்கும் போது இருந்தது”
“என்ன என்ன என்ன எழுதியிருக்கா”இது மாது.”உனக்கு மட்டுமா?”இது ஶ்ரீ.
“எனக்கும் இருந்தது ஶ்ரீ.பொதுவா நான் இங்க வந்தா எனக குன்னு ஒரு தலையனை தருவா ..அவ புடவை வச்சி நுதமுறை அதுக்குள்ள எனக்குகடிதம் வச்சிருந்தா.எனக்கும் அம்மக்கும் ஆயிரம் விஷயம்.ஒவ்வொரு நேரத்திலேயும் அப்படி வழி நடத்துவா…அதெல்லாம் எழுதியிருந்தா…அது கூட உங்க ரெண்டுபேரையும் பழையபடி கலகலன்னு பேசவைக்க சொன்னா…அதை நான் செஞ்சேன்”
“எனக்கு என்ன டீ சொல்லிருக்கா”மாது
“இந்தாபிடி துண்டு காகிதம்”.அவசரமாக அதைபிரித்தான் மாது.முத்துமுத்தாக அவன் அம்மா சிரித்தாள்.
“என்ன மாது முறுக்கு வேண்டுமா”
படித்ததும் அவன் கண்கள் பனித்தது இதழ் மட்டும் சிரித்தது.அவனுடன் அவள் எப்போதும் இது போல விளையாடுவாள்.
சமையல் அறை புகுந்து அவன் அவனுக்காக முறுக்கு வைக்கும் சம்படம் திறந்தான்.உள்ளே இன்னொரு காகிதம்….”முறுக்கு இல்லைடா அதுக்காக விபூதி திண்ணாதே”ஓட்டமாக விபைதி டப்பா திறந்தான்.இப்படி அவனை வீடு முழுதும் சுழலவிட்டு இறுதியாக ஒரு கடிதம் தந்தாள் அம்மா.தனிமை தேடி ஓடினான்.
இதையெல்லாம் பார்த்தேக்கொண்டிருந்த ஶ்ரீ மனம் கலங்கினான்.தனக்கான இடம் எங்கே என்று அவனால் யூகிக்க முடியவில்லை. எங்கெங்கோ தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. தனக்கு மட்டும் எதுவும் இல்லை என்பது அவனை மபுண்படுத்தியது.மசற்று தனிமையில் ஓ வென அழ வேண்டுமாய் இருந்தது.மொட்டை மாடி தேடி விரைந்தான்.ஓரத்தில் சுருண்டு அமர்ந்து வாய்விட்டு அழுது கொண்டிருந்தான்.
“அம்மா!ஏன்மா உனக்கு என் மேல பாசம் இல்லையா.எனக்கு ஒரு சின்ன வரி எழுதக்கூடாதா.நீ