“என் தங்கததின் காலில் கட்டு…உயிர் வலிக்கிற…”எழுத்துக்கள் கண்ணீரில் கரைந்திருந்தது.இப்படி அந்த டைரியின் பக்கங்களில் இதுவரை அவனுடனான தன் முக்கிய நாட்களை குறித்திருந்நாள்.அதில் மாது கோதை பிறந்த பின்னும் கேசவன் அவன் வீடு வந்தபின்னும் இருந்த நாட்களும் அடக்கம்.இறுதியாக அவன் எதிர்பார்த்திருந்தது கிடைத்தது.
“அன்புள்ள அப்பாவுக்கு…
என்ன ஶ்ரீ அப்பான்னு கூப்படறேன்னு பார்க்கறயா.நீ என் அப்பா தாண்டா.பொதுவா முதல் பிள்ளையோட பொருட்கள்பொக்கிஷமா வச்சிக்க நினைப்பாங்க.நான் அப்படியா தெரியலை.ஆனா என் அப்பாவோட பேனா கடிதம் கோட்பின் இதோட உன் பொருட்களும் அவ்வளவு தான்.எனக்கு அம்மா இல்ல ஶ்ரீ.அப்பா தான் எனக்கு எல்லாம். கல்யாணம் ஆகி வந்தப்போ அவரை பிரிய கஷ்டப்பட்டேன்.இங்க வந்த பிறகு உங்க தாத்தாவை அந்த இடத்தில் பார்த்தேன்.என் அப்பா போகும் போது நீ கைக்குழந்தை.அப்போ துக்கம் இருந்தது. வலி இல்ல.காரணம் நீ என் கையில.
நீ வெளிநாடு போகும்போது கூட எனக்ஙு கஷ்டமாத்தான் இருந்தது.ஆனா உன் வளர்ச்சி தான் முக்கியம்ன்னு சொல்லிக்கலை.புகுந்தவீடு வந்த பொண்ணா என்னை தேற்றிகிட்டேன்.நீ பிறந்த அன்னைக்கு இருந்த சந்தோஷம் இப்போ வரை உன்னை பார்த்தா இருக்கு ஶ்ரீ.இப்போ எனக்கு என்னவோ போல இருக்கு.நான் போயிடுவேன்னு தோணுது.உன் குரல்மட்டும் கேட்கனுமா இருந்தது.அதான் ஃபோன் பண்ணேன்.அம்மான்னு உன் அமுதகுரல் கேட்டுட்டேன்.சந்தோஷம் ஶ்ரீ.
ஶ்ரீ உன்க்கு நினைவிருக்கா மாது வயத்தில் இருக்கும் போது உனக்கு நாலு வயசு நினைக்கறேன்.அந்த அத்தை பாட்டி உன்னை என்கிட்ட நெருங்க விடமாட்டா.தூண்பிடிச்சி உதடு பிதுக்கி கண்கலங்க ஏக்கமா என்னை பார்ப்ப.அந்த பார்வை இன்னும் என் நெஞ்சுல இருக்கு.என்ன புரிஞ்சதோ உனக்கு நீ தான் என்னை பார்த்துகிட்ட.கால் அமுக்கி தண்ணீர் கொடுத்து…ஒரு தரம் சாப்பிடாம தூங்கிட்டேன் நீ என்னை எழுப்பி ஊட்டிவிட்ட…அப்போ என் அப்பாவை பார்த்தேன் ஶ்ரீ உன்னில்.கோதை பிறக்கும் போது வலியில் துடிச்ச போது ஆதரவா தலை வருடி சரியாயிடும் மா அழாதேன்னு கண் துடைச்ச.அப்போ உன் கண்ணில் சிறு துளி நினைச்சாலும் சிலிர்க்குது ஶ்ரீ.கண்விழித்து உன்னை தான் முதலில் பாரக்க ஆசைபட்டேன் பார்த்த போது நீ மாதுவுக்கு சாப்பாடு ஊட்டிகிட்டிருந்த..நீ என் அப்பா ஶ்ரீ.
எப்போதும் ஸ்கூல் போகும் போது வரும் போதும் சாப்டியா மா…தண்ணி வேணும் மா…எதாவது உதவி பண்ணட்டுமா மா….தனியாபோகதே மா..நான் வரேன்..அந்த ஆண்டி கிட்ட பேசாத எனக்கு