Page 10 of 10
உமக்கு ஒரு உண்மையை சொல்றேன், முப்பது வருஷமா எங்களிடமிருந்து பெறுகிற வாடகைக்கு நீங்க என் பெயரில்தான் ரசீது கொடுத்திருக்கீங்க! அதனாலே, இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாட எனக்குத்தான் உரிமை உண்டு, நீங்க வீட்டை விற்கிறதுக்கு எனக்கு சம்மதம்னு நான் எழுதிக் கொடுக்கிற அபிடவிட்டை வைத்து நீங்க சமாளித்துவிடலாம், தைரியமாப் போங்க!"
அவன் என்னை கட்டியணைத்து அழுதபோது, அன்று பொழுது புலர்ந்த அதிகாலையில் என் மனதில் ஓடிய எண்ணங்கள் நினைவுக்கு வந்தது, அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறதென கணிக்கமுடியாத, அந்த 'த்ரில்' என்னை நடுவீதியிலே தூக்கி எறிந்து விட்டதை!