(Reading time: 27 - 54 minutes)

நிறுவனங்கள் அவனை வைத்து படம் தயாரிக்க போட்டி போட்டன. அன்று ஆரம்பித்த அவன் பயணம் இன்று வரை போய்க்கொண்டேயிருக்கிறது.

தன் பெற்றோர் விற்றுத் தந்த சொத்துக்களை விட பல மடங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டான். அவர்களை கேலியாக விமர்சனம் செய்தவர்கள் தங்கள் மூக்கின் மீது கை  வைக்கும் அளவிற்கு அவன் தன் பெற்றோரின் நிலையை  உயர்த்திவிட்டான். ராகவேந்தர் இங்கே வந்ததிலிருந்து எந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தாரோ அதுவே விலைக்கு வர அதை விலைக்கு வாங்கி அதன் உரிமையாளராக அவரை அமர்த்திவிட்டான்.

இப்போதும் அவர்கள் எளிமையாகத்தான் இருக்கிறார்கள். பணம் வந்துவிட்டதே என்று அவர்கள் ஆடவில்லை. ரவிவர்மனும் எளிமையானவனாகத்தான் இருந்தான். எளிய மக்களின் சிரமத்தைப் புரிந்தவனாக இருந்தான். அதனால் அவன் படப்பிடிப்பு நடக்கும் நேரங்களில் உணவு முழுவதும் திரைப்படக் குழுவினரோடுதான். மற்றவர்களுக்கு என்ன உணவு தயாராக இருக்கிறதோ அதையேதான் தானும் உண்ணுவான்.

அவன் சாப்பிடுகிறானே என்று உணவை  தரமானதாக தருவார்கள். தயாரிப்பாளர்களிடம் ஒன்றை மட்டும் வலியுறுத்திக் கூறிவிடுவான். அங்கே வேலை செய்யும் அனைவருக்கும் தரமான உணவு வழங்க வேண்டும். அதுவும் அவர்களுக்குப் போதுமானதாக சரியான நேரத்தில் இருக்க வேண்டும். இங்கே வேலைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் வயிற்றுப் பாட்டிற்காகத்தான் வருகிறார்கள். சிலர்தான் பணம், புகழ் என்று வருகிறார்கள். அதனால் யாரையும் பட்டினிப் போடக்கூடாது என்றுவிடுவான்.

இன்று வரையில் அவனுடன் பணியாற்றியவர்கள் வயிறார உண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதனாலேயே அவனுடன் பணி புரிந்த அனைவருக்குமே அவன் மீது அன்பு உண்டு.

அத்தகைய குணமுடைய ரவிவர்மனை திருமணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சியடையாமல் நின்றிருந்தாள் மணமகள் கயல்விழி.

அதற்குக் காரணம் அவள் தன்னைப் பற்றிக் கொண்டிருந்த தவறான எண்ணம்தான். தனக்கு எந்த நல்லதுமே நடக்காது. தான் ஒரு துரதிர்ஷ்டசாலி. இதுதான் அவள் மனதில் பதிந்திருப்பது. அப்படி பதியக் காரணம் அவள் சித்தி.

பிறந்த உடனே தாயைப் பறிகொடுத்தவள் கயல்விழி. அதன் பிறகு வழக்கம்போல் குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்று அவள் தந்தை மறுமணம் செய்து கொள்ள, அவள் வாழ்வில் மகிழ்ச்சியாக கழிந்திருக்க வேண்டிய தருணங்கள் எல்லாம் கண்ணீரோடு தான் கழிந்தன.

அவள் சித்தியின் கொடுமைக்கு சாட்சியாய் இப்போதும் அவள் முகத்தில் ஒரு மாறாத வடு இருக்கிறது. மணப்பெண் அலங்காரத்திற்கு வந்த பெண்கள் கூட அந்த வடுவை மறைக்கப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.