(Reading time: 27 - 54 minutes)

இப்போதும் அவளது சித்தி ஜாடையாக வினுவைக் காட்டினாள்தான். அந்த வீட்டிலிருந்தால் மூச்சு முட்டுவது போல் இருக்கும். எப்படியாவது அங்கேயிருந்து தப்பித்தால் போதும் என்றுதான் அவள் இந்தத் திருமணத்திற்கே ஒத்துக் கொண்டது.

அவள் சித்தி சொன்னது போல் ரவிவர்மனின் பெற்றோர் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டியதுதான். ஊரறிய திருமணம் செய்வதர்கள் நிச்சயம் விரட்டிவிட மாட்டார்கள். ஒரு வேலைக்காரியாகவாவது இருந்துவிட்டுப் போய்விடலாம். இந்த எண்ணத்தில்தான் அவள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதே. ஆனால் வினு அவளுடைய கணவனிடத்தில் காட்டிய உரிமை அவள் மனத்தில் காந்தலை ஏற்படுத்தியது. அத்துடன் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவனை வலியுறுத்தி அவனும் அதை செய்வதைத்தான் அவளால் தாள முடியவில்லை.

அவன் தன்னை மனதாரதான் மனைவியாக ஏற்றுக் கொண்டானா? இதுதான் அவள் மனதை அறுத்துக் கொண்டிருக்கிறது.

கொடைக்கானல்.

இப்போதுதான் ரவிவர்மன் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்திருந்தான். அது வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்துவிட்டன. வெளிவரும் நாளும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்குள் கிடைத்த இடைவெளியில் தன்னுடைய தேனிலவை வைத்துக் கொள்ள முடிவு செய்த ரவிவர்மன் தன் மனைவியோடு கிளம்பிவிட்டான். அவர்களுக்குள் எந்த முன்னேற்றமும் இல்லை. அவன் பெயருக்குத்தான் தேனிலவு என்று அவளை அழைத்து வந்தது. வந்த கையோடு அவளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தான். ஏன் எதற்கென்று சொல்லவில்லை. ஒருவேளை அவனுடைய குழந்தைக்குத் தாயாகும் தகுதி தனக்கிருக்கிருக்கிறதா? என்று பார்த்திருப்பானா? ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு அவன் என்ன செய்தாலும் அவனது பெற்றோர் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்துவிட்டானா? அவள் தன் மனதிற்குள்ளேயே புழுங்கிபோனாள்.

அவளது தயக்கத்தைக் கண்டு அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தனது அடுத்த படத்திற்கு தயாரானான்.

அவனுடைய பெற்றோரும், வினுவும் அடிக்கடி அவர்களை அலைபேசியில் தொல்லை செய்தனர். இத்தனை நாட்களில் அவள் பெயர் வினோதினி என்று கயல்விழி தெரிந்து கொண்டிருந்தாள்.

அதுவும் அவள் மாமியார் சுமித்ராதான் சொன்னார். அவர்கள் பட்டணத்திற்கு வந்த பிறகு அவர்கள் பழக்கமானார்கள். பக்கத்து வீட்டில் வசித்தவர்கள். வினோதினியின் தந்தை இராணுவத்தில் இருந்தவர். அவருக்கு மாறுதல் கிடைத்தபோது வினோதினி போக மாட்டேன் என்று அடம் பிடிக்க சில வருடங்கள் அவள் இவர்கள் வீட்டிலேயே இருந்து படித்திருக்கிறாள். இப்போது அவளது தந்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.