(Reading time: 10 - 20 minutes)

" அப்படின்னா?"

" வெளியில் நடமாட, காவல்துறையின் அனுமதிச் சீட்டு!"

" இல்லையே!"

" வீட்டுக்குப்போய், ஆதார் கார்டு எடுத்துவா!"

" ஆதார் கார்டு முதலாளி வாங்கிக்கிட்டாரு, வேலைக்கு அமர்த்தியபோது!"

" அதை வாங்கிவா!"

" தொழிற்சாலையை மூடி கேட்டை பூட்டிட்டாங்க!"

" ஆதார் இருந்தால்தான், பாஸ் தரமுடியும்...."

" இல்லையே...."

" எந்த ஊரு?"

" செகந்திராபாத்!"

" ஊருக்கு போயிடு!"

" கையிலே காசில்லை."

" நடந்துபோ!" வேன் போய்விட்டது!

குமார், வீடு திரும்பினான். ரித்திகா பசியில் வாடிவதங்கி இருந்தாள்!

நடந்ததை, அவளிடம் கூறினான், குமார்!

" அடப் பாவிங்களா! உயிர் காக்க, ஊரடங்கு சட்டம்னு பேசறாங்க, இங்கே உயிர்கள் பசியில் துடிக்கின்றன, இப்படி துடித்தே சாகவேண்டியது, தானா?"

" யாரை கேட்பது? ரித்திகா! தெரிந்தவங்க வீடு தேடியும் போகமுடியாது, ஏன்னா, வெளியாட்களை உள்ளே விடமாட்டாங்க, வேற வழியே இல்லே, நடந்து ஊருக்கு திரும்பிடலாமா?"

" எத்தனை கிலோமீட்டர் தூரம்?"

" 590 கிலோமீட்டர்!"

" பஸ், கார், எதுவும் கிடைக்காதா? ஊருக்குப் போனதும், பணத்தை கொடுத்துடலாம்......."

" பஸ், ரயில், விமானம், கார், டாக்சி, எதுவும் ஓடலியே........."

" வயத்திலே ஒன்பது மாத கருவை தாங்கிக்கிட்டு என்னாலே நடக்கமுடியுமா?"

" இங்கே இருந்து பசி தாங்காம சாவதைவிட, நடந்து பார்ப்போமே!"

" போகிற வழி தெரியுமா?"

" ஹைதராபாத் போகும் வழின்னு போர்டு போட்டிருக்கான்..அதிலே, போகவேண்டியதுதான்!"

வேறு வழியின்றி, இருவரும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு, துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.