" அப்படின்னா?"
" வெளியில் நடமாட, காவல்துறையின் அனுமதிச் சீட்டு!"
" இல்லையே!"
" வீட்டுக்குப்போய், ஆதார் கார்டு எடுத்துவா!"
" ஆதார் கார்டு முதலாளி வாங்கிக்கிட்டாரு, வேலைக்கு அமர்த்தியபோது!"
" அதை வாங்கிவா!"
" தொழிற்சாலையை மூடி கேட்டை பூட்டிட்டாங்க!"
" ஆதார் இருந்தால்தான், பாஸ் தரமுடியும்...."
" இல்லையே...."
" எந்த ஊரு?"
" செகந்திராபாத்!"
" ஊருக்கு போயிடு!"
" கையிலே காசில்லை."
" நடந்துபோ!" வேன் போய்விட்டது!
குமார், வீடு திரும்பினான். ரித்திகா பசியில் வாடிவதங்கி இருந்தாள்!
நடந்ததை, அவளிடம் கூறினான், குமார்!
" அடப் பாவிங்களா! உயிர் காக்க, ஊரடங்கு சட்டம்னு பேசறாங்க, இங்கே உயிர்கள் பசியில் துடிக்கின்றன, இப்படி துடித்தே சாகவேண்டியது, தானா?"
" யாரை கேட்பது? ரித்திகா! தெரிந்தவங்க வீடு தேடியும் போகமுடியாது, ஏன்னா, வெளியாட்களை உள்ளே விடமாட்டாங்க, வேற வழியே இல்லே, நடந்து ஊருக்கு திரும்பிடலாமா?"
" எத்தனை கிலோமீட்டர் தூரம்?"
" 590 கிலோமீட்டர்!"
" பஸ், கார், எதுவும் கிடைக்காதா? ஊருக்குப் போனதும், பணத்தை கொடுத்துடலாம்......."
" பஸ், ரயில், விமானம், கார், டாக்சி, எதுவும் ஓடலியே........."
" வயத்திலே ஒன்பது மாத கருவை தாங்கிக்கிட்டு என்னாலே நடக்கமுடியுமா?"
" இங்கே இருந்து பசி தாங்காம சாவதைவிட, நடந்து பார்ப்போமே!"
" போகிற வழி தெரியுமா?"
" ஹைதராபாத் போகும் வழின்னு போர்டு போட்டிருக்கான்..அதிலே, போகவேண்டியதுதான்!"
வேறு வழியின்றி, இருவரும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவு, துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.