(Reading time: 10 - 20 minutes)

" நீங்களும் மாரட்பள்ளியா?"

" பக்கத்திலே, லாலாகூடா!"

ரித்திகாவுக்கு மூச்சு இரைத்தது.

" நீ நிறைமாத கர்ப்பிணி! பேசாம நடந்துவா!"

இன்னும் சற்று தூரம் கடந்ததும், மறுபடியும் இடது புற சாலையிலிருந்து, ஒரு கும்பல் சேர்ந்துகொண்டது, குமாருக்கும் ரித்திகாவுக்கும் சற்று நம்பிக்கை பிறந்தது.

அவர்களில், பெண்களும் குழந்தைகளும் இருந்ததால், ஆண்களின் நடைவேகம் தடைப்பட்டது, ரித்திகாவுக்கு சௌகரியமாகி விட்டது.

" பெங்களூரிலே எங்கே வீடு உங்களுக்கு?"

" மல்லேஸ்வரம்!"

" எங்கள் வீடு, பக்கத்திலே ராஜாஜிநகர்! இரண்டு பகுதிகளுமே ரொம்ப பழைய பகுதிகள்........"

" எல்லா வசதிகளும் இருக்கு!"

ஒரு குழந்தை தன் தாயிடம், நெருங்கி வந்து, மெதுவாக, தன் ஒரு விரலை காட்டியது. " கொஞ்சம் பொறுத்துக்க, ஏதாவது ஒதுங்கற இடம் வந்தா சொல்றேன்....." " ரொம்ப அர்ஜண்ட், அம்மா!"

தாய், முன்னும் பின்னும் பார்த்துவிட்டு, சாலையோரத்தை காட்டினாள். சிறுவனும் சிறுநீர் பிரித்துவிட்டுக் கொண்டிருந்தபோது, போலீஸ் வேன் வந்துவிட்டது.

கையும் களவுமாக பிடிபட்டனர்.

" அபராதம் கட்டுங்க! அம்பது ரூபாய்....!"

" ஐயா! காசில்லாமத்தான், ஊரை விட்டே போகிறோம், ஹைதராபாத்!"

அந்த காவலர், அருகே வந்து, ரகசியமாக, " நானும் அந்த ஊர்க்காரன்தான்....ஆமாம், நடந்தேவா அறுநூறு கிலோமீட்டர் போகப்போறீங்க!"

" வேற வழி இல்லீங்களே!"

காவலர் முன்னும் பின்னும் பார்த்துவிட்டு, சைகையால், அனைவரையும் வேனில் ஏறிக்கொள்ளச் சொன்னதும், எல்லோரும் முண்டியடித்தைக்கொண்டு வேனில் புகுந்தனர்.

மனதின் நெருக்கமும் கூடியது!

அந்த நல்லவரால் முடிந்தது, எல்லைவரை கொண்டுவிட்டார். அங்கே அனைவரும் இறங்கியதும், " நீங்க போய்ச்சேர, இருபது இருபத்தைந்து நாளாகும். அங்கங்கே இருக்கிற ஊர்களிலே, கொஞ்சம் தங்கி இளைப்பாறுங்க! கடவுள் உங்களை காப்பாற்றுவார்......"

அனைவரும், அவரை கையெடுத்துக் கும்பிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.