வித்துட்டான்.அந்த ரெண்டுநாள் மயக்கமா இருந்தப்போ என்ன நடந்ததுன்னு தெரியல சார்.ஆனால் இப்போ கூட்டமா வெறிநாய்கள் தங்களோட பசிய தீர்க்க என்னை துரத்துகிறது.
நான் என்ன தப்பு செய்தேன் சார்?பொண்ணா பொறந்ததை தவிர.உடம்பெல்லாம் ஆசிட் ஊத்துனமாறி எரியுது சார்.என்னால் தாங்க முடியல.எனக்கு வாழவும் பிடிக்கல.அதான் சாகலாம் முடிவு செய்தேன்.ஆனால் நான் மரணத்தை பாக்குற முன்னாடி அந்த கும்பல்ல ஒருத்தனாவது சாகனும் நினைத்தேன்.
என் உடம்புல இருந்த எரிச்சலை விட என் மனசுல வழியிற நெருப்பை என்னால தாங்கமுடியல சார்.நான் மட்டும் இல்லை சார் சின்ன சின்ன குழந்தைகள் கூட அந்த நாய்களுக்கு இரையாகிப் போகிறாங்க சார்.அந்த கும்பல் பற்றி நான் சில தகவல்களை தெரிஞ்சுகிட்டதால என்ன கொலை செய்ய தான் சார் வண்டில கூட்டிட்டு வந்தாங்க.அப்போதான் நான் இந்த காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டேன்.
துக்கம் தாளாமல் மண்டியிட்டு அமர்ந்திருந்த அந்த இளைஞனின் பாதத்தில் விழுந்து கதறிய நேரம் அந்த வலிய கரங்கள் என் தலையை ஆதரவாக வருடியது.
ஒரு சிறு பெண் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்கவேண்டும் போகப்பொருளாக பெண்னினம் பார்க்கப்படும் காலம் என்றுதான் மாறும்.....
சாகித்யா இங்க பாரும்மா......அழாதே.என்னை பாருன்னு சொல்லுறேன்ல.......மெதுவாக நிமிர்ந்து பார்த்தேன்.நான் உனக்கு ஒரு வாக்கு தரேன்.நீ இதுவரைக்கும் சந்தித்த உனக்கு நடந்த கொடுமைகளுக்கு ஒரு ஆணாக நான் வெக்கப்படுறேன்.ஆனால் இப்போ நீ என்னை உன்னோட நண்பனா நினைத்து சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.
நீ என்னை நம்புவியா?????
நம்பிக்கையா அப்படி ஒன்று இன்னும் என் மனசுல இருக்கா அதும் ஒரு ஆண்மகன் மீது எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.இருப்பினும் அந்த மனிதனிடம் இருந்த ஏதோ ஒன்று என்னை நம்பத் தூண்டியது(அதைவிடுத்து வேறு மார்க்கமேதும் இல்லா இருளில் இருந்தேன்).
கண்ணியமான பார்வை,அவரது மேலாடை கொடுத்து வேறுபுறம் திரும்பி நின்றது,கண்ணீர் துடைத்து காயத்தை கண்டு இரக்கம் கொண்டது என்று என்மனதில் ஓடியது.
சரிங்க சார்.
அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் எனக்கு தெரிந்தவற்றை கூறினேன்.
கடைசியாக என் கையில் இவ்வளவு போராட்டங்களுக்கும் நடுவில் பிடித்திருந்த சிறிய உள்ளங்கை அளவு இருந்த மரப்பெட்டியை கொடுத்து சார் இதுக்குள்ள ஏதோ விஷயம் இருக்குற மாறி அவங்க பேசிக்கிட்டாங்க.இது உங்களுக்கு உதவுமான்னு தெரியல இருந்தாலும்