உரிமையுண்டு. அதே போல, அப்பாவுக்கும் அவர் சுயமா சம்பாதித்த பணத்தை பங்கு தர, அவருக்கு அவர் மனம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வார், நாம் அதை கேட்கக்கூடாது...."
" அண்ணா! அது உங்க எண்ணம்! ஆனா, நாங்க வேற விதமா நினைக்கிறோம், இப்ப நாம என்ன செய்யப்போறோம்னா, அவர் உரிமையை மறுக்கப் போவது இல்லே, உண்னை என்ன, அவர் தன் தம்பிகளுக்கு பங்கு தருவதா உயில் எழுதினாரா என்று அவரை கேட்டு தெரிஞ்சிக்கப் போறோம், அவ்வளவுதான், அண்ணா! மூத்தவர் என்கிற முறையிலே நீங்களும் கூட வாங்க! அது போதும்!"
சிரித்துக்கொண்டே, மனோகர் அவர்களுடன் சேர சம்மதித்தார்.
" என்ன எல்லாருமா சேர்ந்து வந்திருக்கீங்க?"
" அதில்லேப்பா, வந்து..."
" எதுவாக இருந்தாலும் தயங்காம கேளுங்க!"
" உங்க சொத்திலே எங்க நாலு பேருக்கு மட்டும்தானே பங்கு எழுதி வைத்திருக்கீங்க, அல்லது வேற யாரையாவது சேர்த்து பங்கு பிரிச்சிட்டீங்களா?"
" வக்கீல் சொன்னார், 'உயில்லே எழுதியிருக்கிறதை யாரிடமும் நீங்க சொல்ல வேண்டாம், அது நல்லதல்ல, உங்க காலத்துக்குப் பிறகு நான் அவங்களுக்கு படித்துக் காட்டுவதுதான் முறை'ன்னு சொல்லியிருக்காரே....."
" அப்பா! அவர், தொழில் முறையிலே அப்படி சொல்வது சகஜம்! அதை சீரியஸா எடுத்துக்காதே......"
" சரி! உங்களுக்கு என்ன தெரியணும்?"
" சாட்சி கையெழுத்துப் போட, உங்க தம்பிகள் வந்த போது, அவங்க வேண்டாம்னு வக்கீல் ஏன் சொன்னார்?"
பெரியவர் சிரித்தபின் சொன்னார்: " உடனே உங்களுக்கு நான் அவங்களுக்கும் பங்கு தந்து இருப்பேனோன்னு பயமா? இப்பவே உங்களுக்குள்ளே ரெண்டு, மூணு கட்சியா பிரிஞ்சிட்டீங்களா?
இதை தெரிந்துதான் அவர், என் தம்பிகளுக்கு நான் உயில்லே எழுதியிருக்கறது தெரிய வேண்டாம்னு, அவங்க ரெண்டு பேரை வேண்டாம்னு ஒதுக்கினார். ஏன்னா, சாட்சி கையெழுத்து போடறவங்க, உயிலை முழுக்கப் படித்துப் பார்த்தபிறகே சாட்சிகளா கையெழுத்துப் போடுவேன்னு சொல்வாங்க....அவங்களாலே உங்களுக்குள்ளே பிளவுகூடாதுன்னு........இப்ப, அவங்க இல்லாமலே பிளவு வந்திடிச்சா?
எவ்வளவு பணம், சொத்து இருந்தாலும், நாம ஏன்தான் இப்படி பணத்துக்கு