இவ்வாறு கதைத்தவளல்ல.
"சுமி போனாள்... சுதா போகிறாள்....பாலனும் ஒருத்திக்குப் பின்னாலை போவான்... கெளசியும் போகும்...."
"போகட்டும்!"
"பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது...."
"ஏன் நீங்களும் உங்கடை 'அவளட்டை' போங்கோவன்!"
"என்ன?!"
"உங்கடை "அவளட்டை"
அண்ணா அதிர்ந்தார். இதைப்பற்றி அண்ணிக்கு இலேசாகத் தொ¢யும் என அண்ணா அறிவார். ஆனாலும் இத்தனை காலத்துக்குப் பிறகு இதை வெளிப்படையாக கேட்பாள் என அவர் எண்ணியதில்லை. அண்ணியும் கூட அதை விரும்பவில்லை. அப்படிக் கேட்பதனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும். ஆனால் இன்று அண்ணியின் மனம் மிகப்பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித்தானோ என்னவோ. கோடை காலத்து மழை மாதி¡¢!
"ஏன் அவளை ஏமாத்தின்னீங்கள்?"
"........"
"அதுக்குப் பிறகும் தொடர்பிருக்கா?"
"........"
"இப்பவும் காணிறனீங்களா?"