எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல்லாம் ஓரே பிரகாசமாக ஜொலித்தது. அந்த ஜொலிப்பில், கெளசிக்குட்டிக்கு கண்ணைச் சுற்றியது. சீக்கிரம் தூங்கிப் போனது. கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும் வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார் தயாராக நின்றது. அப்பா பின்னுக்கு கைகளைக் கட்டியபடி வானத்தை அண்ணாந்து கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பொ¢தாகப் பொட்டு இட்டுக் கொண்டிருந்தாள். சுதா அன்¡¢ '¡¢ப்ரொப்'பாக ஆயத்தமாக நிற்கிறாள். அவளிடமிருந்து நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள் கள்ளச்சி¡¢ப்பொன்று ஓடியது.
ஆனால் சுதா அன்¡¢ புறப்படும் போது மிகவும் அழுதாள். வாய்விட்டே அழுதாள். அம்மாவும் அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமி அன்¡¢யும் அழுதாள். அப்பா வெறெங்கோ பார்த்தவராய்.
"சா¢தான்...வாங்கோடி....வாங்கோடி" என இலேசாக அதட்டினார்.
காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை. சுதா அன்¡¢ மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவை எல்லாம் பொ¢யவர்களின் விஷயங்கள். அவற்றில் கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படிச் சொல்லித் தந்திருக்கிறாள்.
கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்¡¢யும், அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய் சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்¡¢ பாதியுடம்பை வெளியே நீட்டியபடி கைகளை ஆட்டியபடி போனாள்.
திரும்ப வரும்போது சுமி அன்¡¢யை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள்.
மெல்ல மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை விடிந்தது.
வீடெல்லாம் 'ஓ' என்ற ஒரு மெளனம். வெறுமை.