(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்

   

"எண்டாலும்...இந்த ஆம்பிள்ளை நம்பேலாதடி....சுதா" என்றாள் நைந்துபோன குரலில்.

   

அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே 'ஏதோ' உண்டு!

   

"இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய்...பிறகுபிறகு அண்ணியை பார்க்க நீ ஓடியா வரப்போறாய்.... எனக்குத் தொ¢யாதா பெட்டையைப் பற்றி...." என்று நையாண்டியாகக் குத்தவும் செய்தாள்.

   

சுமியையும் இப்படித்தான் தனியே பி¡¢த்தணுப்பினாள். சுமியின் 'விஷயம்' அண்ணா காதில் விழுந்ததும், அவர் வானத்துக்கும் பூமிக்குமாகப் பாய்ந்தார். "யாரவன்?" என்று குதித்தார். "எங்கடை அந்தஸ்தென்ன....குலமென்ன, கோத்திரமென்ன" என்று சொல்ல முனைந்தார். அண்ணி வேறுயாருக்கும் கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லிக் கடிந்தாள். அண்ணா தலையைக் குனிந்து கொண்டு கூனிக் குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ 'புகைச்சல்' உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான்.

   

சுமி மெளனமாய்ப் போனாள். ஆனால் அண்ணி அறிவாள், சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும் தாளாத பி¡¢யம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதி¡¢ மெளனமாக இருந்துவிட்டு, "¨தா¢யமாகக் காதல் பண்ணினேன்' கல்யாணம் பண்ணுவேன்" என அடம் பிடித்திருப்பாளா? எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்குத் தொ¢யும்.

   

பாலனைப் பற்றியும் அறிவாள். அவனுக்கும் 'ஒரு இடம்' பார்க்கச் சொல்லி எப்போதிருந்தோ அண்ணாவை நச்சா¢த்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள்.

   

கெளசிக்குட்டியைப் பற்றி அண்ணியின் கற்பனைகளும், திட்டங்களும் எண்ணியோ எழுதியோ அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துக்கள் சேர்க்கத் தொடங்கிவிட்டான்.

   

எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறான். அண்ணாவுடனேயே அவள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.