கடையில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுதாவைப் பற்றிய ஞாபகங்கள் மீண்டு மீண்டும் மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசித் தங்கை. அவளுடனான பி¡¢யமான சில நினைவுகள் அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவைப் பற்றிய கவலைகளும் நிறைய இருந்தன. அவளது அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும், கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனைத் தேடிப்பிடித்து தம் அதைத் தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறள்!
அவருக்கு அண்ணியைப் பார்க்கவேண்டு, அவளுடன் சிறிது நேரத்தைக் கழிக்கவேண்டும் போல இருந்தது.
"அட...தம்பியவன.....நான் வீட்டுப்பக்கம் ஒருக்காப் போயிட்டுவாறான்....பாத்துக்கொள்ளுங்கோ...நான் வரச்சுணங்கினா சாவியைக் கொண்டந்து தந்திட்டுப் போங்கோ..."
அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த மூடைகளினூடாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவா¢ல் "சிவமயம், இலாபம்" என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தொ¢ந்தது.
"வீட்டுக்கா?...."
"ஓம்..."என அண்ணா மெல்ல முனகினார்.
"தங்கச்சி போயிட்டாவோ?"
தலையை ஆட்டினார்.
"எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது தானே.... சந்தோசம்..."
"......"
"தம்பி .....உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு...அது வந்த பிறகு தான் நீர் மனிசனா