(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்

   

அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளைத் தூக்கி முகத்தில் போட்டு மூடிக் கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து அழமாட்டாள். ஆளுமையும் மனவுறுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்!

   

பிறகு

   

கெளசி பள்ளிக் கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது. அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை. உடம்பைக் கழுவி தலை சீவிச் சிங்கா¡¢த்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை. கெளசி அப்பாவிடம் ஓடிற்று. பிறகு அம்மாவிடம் ஓடி அவளது கன்னத்தைத் தாங்கித் தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி பு¡¢யமையுடனும் பசியுடனும் அங்குமிங்கும் அலைந்து தி¡¢ந்தது.

   

அப்புறம், வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே, அப்பாவும் அப்படியே! கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளைப் போட்டது, அம்மா ஒரு பெரு மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி நிமிர்ந்தார்.

   

பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங்கைச் சத்தம் 'சளசள' எனக் கேட்கவாரம்பித்தது. சோப்பின் நல்லன் வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனையுடன், கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கிப் போயிற்று.

   

அண்ணி நிறைய நீராடினாள். ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி உலர்த்தினாள். பிறகு திலகமிட்டுக் கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம். அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமா¡¢யைத் திறந்து அண்ணாவுக்கு பிடித்த அரக்கப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள்.

   

அண்ணாவோ வெனில், கிணற்றுக்கட்டில் உட்கார்ந்தபடியே வானத்தில் மூலை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.