(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்
சிறுகதை - அரசி - ரஞ்சகுமார்

   

"........"

   

"செலவுக்கு ஏதாவது குடுக்கிறனீங்களா?"

   

அண்ணா விக்கித்துப் போயிருந்தார்.

   

"ஏன் ஏமாத்தின்னீங்கள்....என்ரை காசுக்காகவா?"

   

அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.

   

"சொல்லுங்கோ....என்னுடைய காசுக்காகத் தானே என்னைக் கட்டின்னீங்கள்...அவளில்லை தானே உங்களுக்கு ஆசை...ஆம்பிளையை நம்பக்கூடாது....

   

"அப்பிடி...எத்தனை ஆம்பிளையளோட உனக்குப் பளக்கம்" என அண்ணா திரும்பச் சாடினார்.

   

"என்னையும் உங்களைப் போல நினைச்சியளோ?" எனச் சீறுனாள். அந்தக் குரலில் தொனித்த உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிவிட்டுப் பார்க்க வைத்தது. அண்ணியின் அழகிய விழிகள் பெரு வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது.

   

"போங்கோ...உங்கடை அவளட்டைப் போங்கோ...உங்களுக்கு அவளிருக்கிறதன்...."

   

அண்ணாவின் கோபம், இயலாமை. அவமானம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டன. கைகள் முறுக்கேறின. கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின் கோபத்தை ஸ்பா¢சிக்கும் முதல் தடவை.

   

அண்ணியின் பொ¢ய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக நனைந்து, ஒரு பொ¢ய கண்ணீர்த்துளி பளபளவென மின்னியது. 'சொட்'டெனச் சிந்தித் தெறித்தது. அவன் பெறுமதி அளவிடற்கா¢யது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும், காதலும் பொதிந்திருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.