“எஸ் மேடம்...”
“ஏன் பிடிக்கும்?”
“எங்க வீட்டில் முக்கியமானவங்களே அம்மா தான்... எல்லோருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கரெக்ட்டா தெரியும்... எங்களுக்காகவே எல்லாம் செய்வாங்க...”
“அப்போ உங்க அம்மா அவங்களுக்கு பிடிச்சது, ஆனால் உங்க யாருக்கும் பிடிக்காததை செய்தால் உனக்கு பிடிக்காதா?”
“மேடம்?”
“இது தான் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி... ஒரு குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம் என்ன? குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு அனுசரித்து போவது மட்டும் தானா? அவளுக்கென்று விருப்பங்களே இருக்க கூடாதா? பட் என் கணவர் எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவர்... அல்மோஸ்ட் பத்து வருஷமா என்னுடைய விருப்பு வெறுப்புகளை புரிந்து நடந்து கொண்டவர் அவர்... எல்லா விதத்திலேயும் ஒரு நல்ல கணவரா நடந்துக் கொண்டிருந்தவர் இப்படி மாறினதுக்கு நானும் கூட ஒரு காரணம் தானே? அம்மா இறந்த போது கூட நீ இருப்பதே போதும்னு சொன்னவர், மனதில் எத்தனை வருத்தம் இருந்தால் எனக்கு ஒரு கம்பேனியன் வேணும்னு யாரையோ தேடி போய் இருப்பார்?”
“ம்ம்ம்...”
“நான் செய்வது சரியா தவறான்னு தெரியலை.. ஆனால் ஒரு அம்மாவா என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல குடும்ப சுழல் தேவைன்னு தோணுது... இன்பாக்ட் இதில் என் பக்கமும் தவறு இருக்கு... ஸோ அவருக்கு பெனிபிட் ஆப் டவுட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்... அவர் எனக்காக செய்திருக்கும் எத்தனையோ விஷயங்களுக்காக் இன்னுமொரு சான்ஸ்...”
“...”