சௌபர்ணிகாவின் குரலில் அதிர்ச்சி இருந்தது...
“யெஸ் நேத்து நைட் எல்லாம் ரொம்ப யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தேன்...”
“எனக்கு புரியலை மேடம், நீங்க போய் இப்படி... அதுவும் அஞ்சு வருஷமா உங்களை ஏமாற்றுபவரை...”
சௌபர்ணிகாவின் குரலில் ஒலித்த ஏமாற்றத்தை கவனித்தப் படி,
“அஞ்சு வருஷமா? உனக்கு யார் சொன்னது?”
“என்னோட சித்தி, மேடம்...”
“ஹா ஹா ஹா...” கஸ்தூரி வாய் விட்டு சிரித்தாள்.
“சாரி சௌபர்ணிகா தப்பா எடுத்துக்காதே... பட் ரியல்லி எனக்கு என்ன சொல்வதுன்னு தெரியலை... அவங்க சொன்னது போல் எல்லாம் இல்லை... இது இப்போ சில நாட்களாக நடக்கும் விஷயம் தான்...”
“ம்ம்ம்...”
“உனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது... எங்க மேரேஜ் லவ் மேரேஜ்... என்னோட சின்ன வயசிலேயே அம்மா அப்பா இறந்துட்டாங்க... நான் வளர்ந்தது முக்கால்வாசி ஹாஸ்டலில் தான்... சித்தப்பா பெரியப்பா எல்லாம் கார்டியனா இருந்தாங்க... காலேஜில் என்னோட கிளாஸ்மேட் குமரன்... அப்புறம் என்ன எங்களுக்குள் காதல், அவருடைய வீட்டில் எதிர்ப்பு... அதை எல்லாம் மீறி எங்க கல்யாணம்! எனக்கு அப்போ உன்னை போலவே பெரிய பத்திரிகை எழுத்தாளர் ஆகனும்னு ஆசை... ஆனாலும் இட் வாஸ் நாட் லைக் நவ்... நான் ரொம்ப தயங்கினேன், என்னை என்கரேஜ் செய்து இந்த பீல்டை கரியரா செலெக்ட் செய்ய வைத்தவரே அவர் தான்... இன்பாக்ட் அவங்க அம்மா இறந்த போது கடைசியா ஒரு தடவை அவங்க