வேணாம் தலை மட்டும் ஆடியது ......கண்ணீர் நின்ற பாடில்லை ........நானும் கட்டுப்படுத்த நினைக்கிறேன் முடியவில்லை .
எல்லா பாலையும் அவனே குடித்து விட்டு, நிம்மதியா படுத்து தூங்கு, நான் உன்ன எதுவும் பண்ண மாட்டேன் ....மெல்லிய புன்னகை ஒன்றை என்னை பார்த்து சிந்த , முதல் முறை என்னை பார்த்து சிரித்தான் அவன் இரு கன்னத்திலும் அழகாய் குழி விழுந்தது. அமைதியாய் படுத்து உறங்கி விட்டேன். எப்படி உறங்கினேன்...? தெரியாது அம்மா சொன்னது போல எனக்கு கொஞ்சம் கூட அடுத்த வீட்டில் உறங்குறேன் என்ற அந்த இது இல்லை போல .........
மறு நாள் காலை 5.30 மணி கதவை திறந்தாள் மீண்டும் அவன் அண்ணி. ஏய் அதுக்குள்ள எந்திரிச்சுட்ட .....?.மச்சினன் தூங்குறாரா..? உள்ளே எட்டி பாக்க நான் அவளை மு
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்தா பொண்ணு ...........இவன பத்திரமா பாத்துக்கோ .......இவன் பத்தாவது படிக்கும் போதே இவன் அப்பன் இறந்துட்டான். பொறவு யார்கிட்டயும் இவன் அவ்வளவா ஒட்டாமையே வளந்துட்டான் ........யார்கிட்டயும் மனசுல இருக்குறத சொல்லமாட்டான் பிடிச்சவங்களுக்காக எதுன்னாலும் செய்வான் ........சிரமப்பட்டு பேசினார்.