“ஆனா, நான் உன்னை லவ் பண்ணினேண்டா… உங்கிட்ட சொல்லலாம்னு பார்த்தா நீ பேசவே இல்ல. என் ஃப்ரெண்ட் கீதாகிட்ட உங்கிட்ட பேச சொல்லி அனுப்பினேன். என்னை தெரியாதுன்னு சொன்னியாமே..”
“அப்படி யாரும் வரலையே.”
“ஹேய் ஒல்லியா உயரமா ஒரு பொண்ணுடா.. நல்லா யோசி.”
“ம்ம். ஒரு பொண்ணு வந்தது. சத்யா தெரியுமான்னு கேட்டுச்சு. நான் தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். அம்மா மணப்பொண்ணு பேரு கூட சத்யான்னு சொன்னாங்க. நீ தான் சத்யாவா?. ஆனா உன் பேரு வெண்ணிலாவாச்சே.!!”
“சாரிடா. என் பேரு சத்யா தான். வெண்ணிலான்னு சும்மா பொய் சொல்லிட்டேன்.”
“அடிப்பாவி பொய் புழுகி.”
“நீ மட்டும் என்னவாம்?. உன் பேரு பரத்துன்னு சொன்ன. எங்க அப்பா ராம்னு சொன்னாரே,”
“என் பேரு ராம் பரத். ராம் என்ற பேருக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லன்னு எல்லார்கிட்டயும் பரத் பேர தான் சொல்லுவேன்.”
“ஓ. அப்படியா?. இனி நீ ராமனா தான் இருக்கணும். கிருஷ்ணனா இருக்க கூடாது சரியா?.”
“சரி..” என்றபடி என் கையை மெதுவாக பிடித்தான்.
“கையை பிடிக்கலாமாம்ல?. அறைஞ்சுற மாட்டீயே!!??”
“மாட்டேண்டா. நான் உன்னோட நிலாடா..”
“அப்படியா?. இப்போ கை நடுங்கலை.. அதெப்படியாம்?.”
“நேற்று வரை நீ யாரோ நான் யாரோ..
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ..”
என்றபடி அவன் மார்பில் சாய்ந்தேன்.
“அய்யோ பாட ஆரம்பிச்சா நீ நிறுத்த மாட்டீயேடி.. அதனால இப்போ..” என சொல்லியவன்,
என் இதழை அவன் இதழால் மூடி எனை அணைத்தபடி எங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கினான்..
அப்போது, எங்கிருந்தோ, “இதழில் கதை எழுதும் நேரமிது..” என்ற பாடல் கேட்டது..
இது என்னோட முதல் சிறு கதை. இதை எழுத inspirationஆக இருந்த என் குரு கிருஷ்ணபாபுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்.
கதையை பப்ளிஷ் செய்த chillzeeக்கு பெரிய தேங்க்ஸ்.
கதையை படிச்சிட்டு உங்க கமன்ட்ஸ் சொல்லுங்க பிரென்ட்ஸ். மொக்கை கதையா இருந்தா அட்ஜஸ்ட் செய்துக்கோங்கப்பா.
கதையை படித்த எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
{kunena_discuss:785}