(Reading time: 38 - 76 minutes)

விக்ரம் அப்பொழுது வந்து அப்போ மாமா நீங்க ,அத்தை,வினு எல்லாரும் வீட்டுக்கு போங்க நான் ,மாதவன்,விஜி இங்க இருக்கோம்.

விக்ரம் ஏதோ பண்ண போறான்னு தோணினது சுந்தரேசனுக்கு மாப்பிள்ளை சொல்றேன்னு தப்ப எடுத்துக்காதீங்க நீங்க நல்லது செய்யணும்னு தான் நெனைக்குறீங்க ஆனா அது அவளுக்கு கஷ்டத்தைல அதிகமாக்குது.

மாமா நாம புன்னை ஆரம்ப கட்டத்துல சும்மா விட்டாச்சு இப்போ புரை ஏறிறுச்சு சோ வலிக்க வலிக்க தான் அறுத்தாகணும் இல்லைனா அவ ரொம்ப கஷ்டபடுவா மாமா.

என்னவோ பண்ணுங்க ஆனா அவ ரொம்ப கஷ்டபட்டுராம பாத்துக்கோங்க .

நான் இருக்கேன் மாமா கவலை படாம போங்க மாமா.

மாதவா நான் சொல்றத கேளு இனிமேல் நீ அவ பக்கத்துலயே இரு ...

அண்ணா அவ என்ன பாத்தாலே கண்ணாலேயே எரிச்சிருவா போல அண்ணா பயமா இருக்கு அண்ணா.

இல்ல நீ போ நாம இங்க பேசுறப்போவே அங்க அவள்ட விஜி பேசிருப்பா

அண்ணி என்ன பேசுனாங்க

அது சஸ்பென்ஸ்...

போங்கண்ணா

சேரி நீங்க போங்க உள்ளுக்குள்ள மேடம் WAITING உங்களுக்காக

 அவன் உள்ளே சென்ற நேரம் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள் .

அருகில் அமர்ந்த அவன் கண்கள் தானாக அவள் மேனியை ஆராய்ந்தது 8 வருடங்களுக்கு முன்பு அவளை தன்னவளாகிக்கொண்ட நாள் நினைவில் வந்தது .அவன் மணியை பார்த்தான் இரவு 8 மணி .தன மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு அவள் கூந்தலை மெல்ல கோத ஆரம்பித்தான் "மதி ப்ளீஸ் டா என்ன விட்டுட்டு போயிடாத நீ என்ன விட்டுட்டு போனதுல இருந்து உன் ஞாபகங்கள் தான் என்னை உயிரோட வச்சிருக்கு திரும்பவும் என்ன நடைபிணமா வாழ வச்சிட்டு நீயும் சாகாத டா ப்ளீஸ்".என்று மனதுக்குள் புலம்பினான் .அப்பொழுது அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது .

8 வருடங்களுக்கு முன்பு ........

கேசவன் மாதவனின் தந்தை சுந்தரேசனுடன் படித்தவர் நாளடைவில் தொடர்பு துண்டித்தாலும் பாலிய சிநேகிதர்கள் .ஒரு நாள் தனிஷ்க் ஷோரூம் ல் சுந்தரேசன் மதுவின் பிறந்தநாளுக்காக பரிசு வாங்க சென்றிருந்தார் அப்பொழுது அங்கு கேசவன் குடும்பத்துடன் வந்திருந்தார் . பாலிய சிநேகிதர்கள் இருவரும் தத்தமது நலன்களை விசாரித்து அளவளாவினர் பின்பு தனது மகன் மாதவனுக்கும் மதுவுக்கும் திருமணம் செய்வது என்றும் அவள் பிறந்தநாள் அன்று நிச்சயம் என்றும் இரு வீட்டாரும் மணப்பெண் மாப்பிள்ளையின் விருப்பத்தை கேட்காமல் முடிவு எடுத்தனர் . விஷயம் அறிந்த இருவரும் அதிர்ந்தனர். மதுவோ எப்பொழுதும் போல் அம்மா அப்பா நம்ம நல்லதுக்கு தான் பண்ணுவாங்க என்று தன மனதை அதற்கு தயார் செய்து கொண்டாள் ஆனால் மாதவன் நிலைமையோ படு மோசம் அவன் மறுத்தும் அவன் அப்பா அவனை மிரட்டி சம்மதிக்க வைத்தார் ஏன் என்றால் அவனுக்கு இப்பொழுது FORIEGN மோகம் தலைக்கேறி இருந்தது அதற்கேற்ப வாய்ப்புகளும் அவனை தேடி வந்தது அதனால் அவன் FORIEGN  போகும் முன் திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடைசியில் அவர் உறுதி ஜெயித்தது .

திருமணத்தன்று மஞ்சளும் பிறகும் கலந்த பட்டு சேலையில் தேவதையை வந்தவளின் அழகு இன்னும் அவன் கண் முன் தோன்றியது .இப்பொழுது அவள் முகத்தை பார்த்த அவன் மனம் வேதனையில் துடித்தது .அன்று அவள் கண்களில் கனவுகள் மின்னின ஆனால் இன்றோ அவள் கணங்களில் ஒளி இல்லை அவை காலை இழந்து இருந்தது . மீண்டும் அவன் பழைய நினைவுகளை ஆசை போட்டான் ....

அவன் அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நிமிடம் அவள் விழிகள் மெல்ல நிமிர்ந்து அவன் கண்களை ஒரு நொடி பார்த்தது பின்பு அவள் கண்களில் மின்னிய ஒளி பட்டென்று மறைந்தது பின்பு எடுத்த அணைத்து போட்டோக்களும் யாரேனும் ஒருவர் அவளை புன்னகை புரிய நினைவுபடுத்த வேண்டியதாய் இருந்தது.

அன்று இரவு அவனை தனியே சந்தித்தவள் நம்ம ரெண்டு பேர் விருப்பம் இல்லாம நம்ம அப்பா அம்மாவுக்காக நாம நம்ம கல்யாணத்த பண்ணிக்கிட்டோம் . சோ வெள் இங்க இருக்க வரைக்கும் the happening couples அ நடிச்சிட்டு fpreign கெளம்பிரலாம் அப்புறம் உங்க இஷ்டப்படி முடிவை எடுங்க .

இது தான் என்னோட முடிவு நீங்க என்ன நெனைக்குறிங்க?

it sounds good idea but let's be friends till then deal ok என்று கூறி கை கொடுத்தான்.அவளும் அவனுக்கு கை கொடுத்தாள் இவனுடைய கை நடுங்கியது அனால் அவளிடம் ஏன்டா பதற்றமும் இல்லை.அவளது அன்றைய தொடுகை முதல் ஸ்பரிசத்தை பற்றி இன்று நினைத்தாலும் அவனுக்கு உடல் சிளிர்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.