(Reading time: 38 - 76 minutes)

தோ யோசனையுடன் காரை விட்டு இறங்கியவள் மறந்து அடிபட்ட காலை ஊன்றி விட்டால் லேசாக முனங்கியதாக தான் அவள் நினைத்தாள் அனால் மாதவன் அவளை அடுத்த அடி எடுத்து வைக்க விடவில்லை அவளை கைகளில் ஏந்திக்கொண்டு வீட்டினுள் சென்றான்.

அப்பொழுது எதிர்பட்ட சுந்தரேசனிடம் நீங்க மதுவை தூக்கி தூக்கி பாருங்க இப்போ அவளுக்கு நடக்க தெரியாம நான் தூக்க வேண்டியதா இருக்கு.

அதெல்லாம் இல்லை நானே நடப்பேன் என்று ரோஷமாக சொன்ன மதுவை பார்த்து எங்க நீ நடக்க போறியா இப்போ நீ நடந்ததை பார்த்தேனே  என்று அவள் கிண்டல் செய்ய அவள் வெட்கத்துடன் இறங்க எண்ணினாள் அனால் அவன் அவளை அவள் ரூம் வரை தூக்கி சென்றான்

சுந்தரேசனோ நீண்ட நாள் கழித்து மகளின் சிரித்த முகத்தை பார்த்த நிம்மதியில் புன்னகையுடன் சென்று கல்லில் நடந்த விஷயத்தை அனைவருக்கும் கூறினார் அனைவரும் நல்லதொரு விடியலை எண்ணி கொண்டு இரவு உணவு தயார் பண்ணா சென்றனர் .

அப்பொழுது வினு வந்து "சித்தப்பா உனக்கு மது மா சமைச்சது சாப்பிடணும்னு ஆசை இருந்த சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன் ஆனா எனக்கு நீங்க ஐஸ் கிரீம் IBACO ல வாங்கி தரணும்"

டே மாதவா இவன் பெரிய ஆளு டா ஆனா இவன் கேட்ட அவ இல்லைனே சொல்ல மாட்டா யூஸ் பண்ணிக்கோ இவனை

அப்டி இல்ல அண்ணா இந்த செல்ல குட்டி என்ன கேட்டாலும் நானும் குடுப்பேன்

நீ சொல்லுடா தங்கம் உனக்கு என்ன வேணும்னு அதையே மதுமாவை சமைக்க சொல்லலாம் ஹ்ம்ம் ஓகே டன்

ஹ்ம்ம் மதுமா எனக்கு பாலக் பன்னீர் பண்ணி தாவென கேட்டான் கேட்டது தான் தாமதம் உடனே சென்றுவிட்டாள் அவனுக்கு பண்ணி குடுக்க.

அனைவரும் இரவு உணவு சாப்பிட உட்கார்ந்தனர் விஜி அனைவருக்கும் பரிமாறினாள்  மாதவனுக்கும் அதை வைக்க போனாள் அப்போழுது மது. விஜி வேண்டாம் அவனுக்கு பன்னீர் அலர்ஜி அதுனால தம் ஆலு பன்னீருக்கேன் அதை கொடு.

அனைவரும் அவளை ஆச்சர்யமாக பார்க்க மாதவனின் கண்களோ "நீ இன்னைக்கு மாட்டுன மவளே " என்று குத்தாட்டம் போட்டு விட்டு "அண்ணி எனக்கு பாலக் பன்னீரையே கொடுங்க எனக்கு ஒன்னும் ஆகாது அதை பத்தி சம்பந்தம் இல்லாதவங்கள்லாம் கவலை பட வேண்டாம் " என்று வீறாப்பாக கூறினான் .

மதுவும் எனக்கென்ன வந்தது என்று அவள் வேலையில் கண்ணாக இருந்தாள் அப்பொழுது அவளுக்கு போன் வந்தது எடுத்து பார்த்தாள் அவளது மண்டல தலைவர் . இந்த நேரத்தில் இவர் ஏன் கால் பன்றாரு என்று எண்ணியவாறே பேச ஆரம்பித்தாள் அதுவும் கன்னடத்தில் வீட்டில் உள்ள ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை அனால் அவள் முக மாறுதலை கொண்டு விஜிக்கும் மீனாவுக்கும் புரிந்தது அது மதுவிற்கு மகிழ்ச்சி என்று ஆனால் மாதவனோ குழம்பி போனான் .

போனை வைத்த மது "அம்மா எனக்கு transfer வித் ப்ரோமோஷன்  கொடுக்கறாங்க அம்மா டெல்லி கு இன்னும் 10 days ல இங்க உள்ள ஒர்க் handover பண்ணிட்டு கிளம்பனும். ஏன் லைப்ல ஒன்னு ஆப் தி பெஸ்ட் டே மா இன்னைக்கு"

அது வரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்த மீனா சந்தோஷம் மது ஆனா உன் லைப் உன் வேல மட்டும் தானா. உன் லைப் என்னோடையும் வினுவோடயும் முடியது இல்ல.

நீ விக்ரம் கூடையும் இப்போ பேசுறது இல்ல என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்க.உன் அப்பா நிம்மதியா தூங்கி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா .

அம்மா ந என்ன பண்ணேன் என்னை யாருமே புரிஞ்சுக்கலை

இல்ல மது உன்னை எல்லாருமே புரிஞ்சிகிட்டு உனக்காக வேண்டி தான் வாழறோம் ஆனா நீ யாரையும் புரிஞ்சுக்கலை யாரையும் பேச விட்றதும் இல்லை.நான் வந்தது தானே நீ ஊரை விட்டு போக காரணம் நான் போயிடுறேன் கனடாவுக்கே திரும்பி நீ உன் அம்மா அப்பாவோட இரு"

ஹலோ சார் நீங்க என் லைப்லேயே இல்ல அப்பறோம் எதுக்கு ந கவலை பாடணும் நீங்க எங்க இருந்தாலும். நீங்க இருந்தாலும் இல்லைனாலும் that doesn't matters to me

அப்பொழுது பளார் என்று ஒரு அறை மதுவின் கன்னத்தில் விழுந்தது யார் என்று பார்த்தாள் அது மாதவன் தான் உட்ச கட்ட கோவத்தில் இருந்தான் அவள் தடுமாறவும் தாங்கியவனும் அவன் தான் இது அவர்கள் இருவருக்கும் உள்ள நேரம் என்று மொத குடும்பமும் அமைதியாக இருந்தது ஆனால் இதை பார்க்க முடியாத சுந்தரேசன் தன பேரனை தூக்கிக்கொண்டு வெளியில் சென்று தோட்டத்தில் உட்கார்ந்து விட்டார்.

"நா இருந்தாலும் இல்லைனாலும் உனக்கு கவலை இல்லைல அப்பறோம் ஏன் 8 வருஷம் கழிச்சும் எனக்கு எது புடிக்கும் எது ஒத்துக்காது எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க இல்ல ஒரு வார்த்தை பேசாத இன்னைக்கு தான் உன்கிட்ட நான் பேசறது கடைசி சோ பேசிட்டு போயிடுறேன் . நான் உன் மனசுல தான்டி இருக்கேன் அது உன் நடவடிக்கை எல்லாத்துலயும் தெரியுது . நான் திருப்பி சொல்ல வேண்டாம் அப்பறோம் டெல்லி என்ன அண்டார்டிகா போன கூட உண் பின்னாடி வருவேன் .இப்போ நீ எங்க இருக்கேனு தெரியம்மையா வராம இருந்தேனு நீ நெனைக்குற நீ   நான் உன்ன காண்டாக்ட் பண்ண செத்திருவேன்னு சொன்னதுனால தான் பேசாம எல்லாரு முன்னாடியும் ந ஒரு வில்லன் மாறி இருந்தேன் இனியும் இருப்பேன் என்ன எனக்கு நீ உயிரோட வேணும் . எங்க இருந்தாலும் நீ சந்தோஷமாவும் நல்லாவும் இருக்கணும் அதுக்காக நா எவ்ளோ தூரம் வேணாலும் விட்டு கொடுப்பேன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.