2017 போட்டி சிறுகதை 144 - நட்பு - நிவேதா கார்த்திகேயன்
This is entry #144 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - நிவேதா கார்த்திகேயன்
என் பெயர் லக்கி. என்னோட அப்பா அம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அது தாத்தாவுக்கு விருப்பம் இல்லை. அதுல இருந்து தாத்தா அப்பாவோட பேச மாட்டார். நான் பொறந்ததுக்கு அப்பறம் என்கிட்டே மட்டும் பேசுவாங்க. என்னோட அப்பா என் மூலமா தாத்தா கிட்ட பேசிப்பாரு.
அப்பத்தான் ஒரு நாள் என்னை தாத்தா வீட்டிற்கு பலகாரம் கொண்டு போக சொன்னாரு அப்பா. நானும் தாத்தா வீட்டிற்கு சென்றேன் . என்னை பார்த்தவுடன் தாத்தாவிற்கு ஒரே சந்தோசம் . பாட்டி தாத்தாவிடம் இன்னும் ஏன் தான் இப்படி வீம்பா இருப்பீங்க . நம்ம பையன்கிட்ட பேசலாம்ல அப்படின்னு சொன்னாங்க. தாத்தாவும் என்கிட்டே நாளைக்கு உன்னோட அப்பாவை வர இங்க சொல்லுனு சொன்னாங்க. நான் வேகமா மண்டைய மட்டும் ஆட்டிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
வீட்டுக்கு வந்த உடனே அப்பா வேகமா வந்து டேய் தாத்தா என்ன சொன்னாரு . பலகாரம் சாப்பிட்டாரா . எப்படி இருக்காங்க தாத்தா பாட்டி . இப்படி நிறைய கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டே போக எனக்கு உள்ள இருந்து பருப்பு சாதம் அதோட கருவாடு பொறிக்கற வாசம் வந்துச்சு . நான் உடனே வேகமா உள்ள ஓடிட்டேன். ஆனாலும் அப்பா என்ன விடல அவரும் உள்ள என் பின்னாடியே வந்தார்.அம்மா சாதமும் கருவாடும் எனக்கு ஊட்ட ஆரம்பிச்சாங்க .அப்பா திரும்பவும் கேள்விகளை ஸ்டார்ட் பண்ணாரு.
அம்மா , " டேய் நீ சாப்பிடு டா . சும்மா சாப்பிடற பிள்ளையை தொந்தரவு பண்ணிக்கிட்டு."
நான் , " அது இல்ல ம .........."
அம்மா வேகமா அடுத்த வாயை ஊட்டினார்கள் . அப்பா மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாரு. அதுக்கு அம்மா சொன்னார் ," வேற என்ன சொல்லிருப்பாங்க உங்களை திட்டிருப்பாங்க அவ்ளோதான் ".
நான் திருப்பியும் இல்லைன்னு சொல்ல வாயை திறக்க அம்மா சாதத்தை வைத்து விட்டார். நானும் சமத்தா சாப்பிட்டு போய் தூங்கிட்டேன்.
அடுத்த ரெண்டாவது நாள் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்துச்சு. நான் அப்பா அம்மா எல்லாரும் பார்க்க போனோம். எங்களை பார்த்தவுடனே பாட்டி கோவமா அப்பாகிட்ட பேசுனாங்க .
ஏன் டா நீ வருவன்னு எவ்ளோ நேரமா காத்துகிட்டு இருந்தாரு தெரியுமா . அந்த கவலைல தான் அவருக்கு இப்படி ஆகிருச்சு.ஏன் டா வரல .ம்ம் ...... அவ்ளோ வீம்பா டா உனக்கு.
என் அப்பாவுக்கு ஒன்னும் புரியல . என்ன அம்மா சொல்றீங்க . நான் வருவேன்னு காத்துகிட்டு இருந்தாரா . எதுக்கு ?
என்னது எதுக்கா ? உன்ன வீட்டுக்கு வர சொல்லி இருந்தாரு ல . அதுனால தான்.
என்ன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என் அப்பாவுக்கு ஷாக் .
யார் கிட்ட சொன்னிங்க .எனக்கு எதுவும் தெரியாதுன்னு அப்பா சொல்ல இப்போ பாட்டி செம்ம டென்ஷன். அவங்க உடனே இதோ லக்கி கிட்ட சொன்னோம் . ஏன் டா லக்கி நீ உன் அப்பாகிட்ட சொல்லலையா .
இப்போ எல்லாரும் என்னையவே பார்த்தாங்க . நான் ரொம்ப கூலா சொன்னேன் "மறந்துட்டேன் பா "
அந்த சிச்சுவேஷனுக்கு தாத்தாவே என்ன வினோதமா ஒரு பார்வை பார்த்தாரு.இது எப்போ நடந்ததுன்னு நினைக்கிறிங்க நான் 5th ஸ்டாண்டர்டு படிக்கும் போது நடந்தது.இது தாங்க நான் . என்னோட மெயின் ப்ராபளம் மைன்ட் டைவர்சன் . அதாவது என்னால ஒரே நேரத்துல ரெண்டு விஷயத்தை யோசிக்க முடியாது . சசிம்பிளா சொல்லனும்னா ஒரு விஷயத்தை பத்தி திங்க் பண்ணும்போது அடுத்த விஷயம் வந்தா பழச மறந்துருவேன். மறந்துட்டேன்னு தெரியக்கூடாதுன்னு நிறையா சமாளிப்பேன். எல்லா டாக்டர்ஸும் சொன்ன ஒரே பதில் மெனுபாக்ச்சரிங் டெபெக்ட்.எப்படியோ படிச்சு இப்ப நான் ஒரு லேப் டெச்னீசியன்.
இது நாள் வரைக்கும் இந்த ப்ராபளம் ஒரு பெரிய விஷயமாவே தெரியல எனக்கு.சரிங்க என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க இப்போ என் பிரெண்டு பத்தி சொல்றேன். அவன் பேரு ரமேஷ் . பாவம்ங்க அவன் ரொம்ப நல்ல பையன். அட ஏன்னு யோசிக்கிறீர்களா எல்லாம் நம்ம பிரண்டா இருக்காப்ல இல்ல அதான்.அவனுக்கு என்ன பத்தி எல்லாமே தெரியும் . உண்மையான உயிர் நண்பன் என்னோட ரமேஷ்.
அன்னைக்கு காலைல வேகமா ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருந்தேன். ரமேஷ் போன் பண்ணி , "டீன் னுக்கு சீரியஸ் டா .அவருக்கு அவசரமா பிளட் தேவை ப் படுது உன்னோட குரூப் தான். சீக்கிரமா வந்து சேரு ".