"உன்னை நினைத்தால் பாவமா தான் இருக்கு!செய்த பாவம் யாரை விட்டது?உன்னால யாருக்கும் என்னப் பயன்?பூமிக்கு பாரமா இருக்க!கதறி அழணும்னு தோணுதுப் போல!ஐயோ பாவம்...!உன்னால தான் கத்தக்கூட முடியாதே!கூடிய சீக்கிரம் இந்தப் பாவப்பட்ட வாழ்க்கையிலிருந்து உனக்கு விடுதலை தந்துடுறேன்!"-அவரது கரத்தை உதறிவிட்டு எழுந்துச் சென்றார் மதுமதி.மீண்டும் கண்ணீர்!!அதே பலவீனமான,இருள் சூழ்ந்த உலகம்!!!போதுமடா என்று வெறுத்துப் போன இதயம்!!அச்சமயம் உற்ற காதலியாய் அவரிடத்தில்!!
அவர் மனம் அசைப்போட தொடங்கியது!!தனது கடந்தக்காலத்தை...!கடந்தக்காலமாய் உருமாறிய வாழ்வாதாரத்தை...!இன்னும் மன்னிப்புக் கிட்டவில்லைப் போலும்!!ஆம்...!குறித்த நபர் இன்னும் மன்னிக்கவில்லை.ஆதலால்,விளைந்தது தான் இவ்வேதனைகள் அனைத்தும்!!அன்று சொடுக்கிட்ட தினங்கள்...இன்று சாட்டை சொடுக்கின்றன...!!விளைந்த நாசம் எல்லாம் தனது கர்ம பலன் அல்லவா!!!முடியாத தொடர்கதையாய் தகிக்கின்றன....இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் தான்???விடிவென்பது இல்லையா என் வானில்??விளக்க இயலாத கேள்விகளுடன் மனம் பதைத்தது.அந்த நரனுக்கு!!!
தொடரும்!
{kunena_discuss:1149}