“ஹலோ, நானும் தெளிவாதான் இருக்கேன்.. கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருக்கிறது தப்பா? அப்படி நான் என்ன தெளிவில்லாம் பண்ணுனேனு சொல்லு” குழந்தைதனமாக காவ்யா ரிஷியிடம் சண்டையிட்டாள்.
“பின்ன, உன்ன என்ன பண்றது, இலா பத்தி தெரிஞ்சுக்காமா போலீஸ் ஸ்டேஷன் வர போயிட்ட, அப்பப்பா அட்லீஸ்ட் உங்கிட்ட நான் சொன்னதையும் நம்பல..ஓகே, பட் அவங்க வீட்ல அவன பார்த்தவுடனேயே அவன் நல்லவன் நினைச்ச!”
“அப்ப அவரு ஜென்டில்மேன் இல்லையா?”
“அஃப்கோர்ஸ் ஹீ இஸ் எ ஜென்டில்மேன்..ஆனா எவ்ளோ சீக்கிரமா நீ ஒருத்தர நம்புறையோ அவ்வளவு சீக்கிரம் அவங்கள சந்தேகம் படுற அன்ட் வைஸ் வெர்ஸா”
ரிஷி சொல்லி முடிக்கவும் காவ்யா குளம்பினாள், தர்ஷினியின் முகத்தில் லேசான அதிர்ச்சி, அவள் ரிஷியையே பார்த்தாள், ரிஷி விசயத்திலும் காவ்யா இப்படிதான் நடந்துகொண்டாள் என தோன்றியது.
“சரி அதவிடலாம்..நீங்க ஏன் சிவாகிட்ட அங்கிள் சொல்றத பத்தி கேட்கக்கூடாது?”
“இல்ல ரிஷி, எங்கிட்ட சொல்ற விசயமா இருந்தா அவர் நிச்சயம் சொல்லிருப்பாரு… எங்கிட்ட அவர் சொல்லவிரும்பாததற்கும் ஏதாவது காரணமிருக்கும்..!”
சிறிது நேர மௌனம்..
“இல்ல தர்ஷினி அதெல்லாம் தெரிஞ்சா நீங்க தாங்க மாட்டீங்க…அதான்!”
இப்போது காவ்யாவும் தர்ஷினியும் ஒருசேர ரிஷியை பார்க்க..அவன் தூரத்தில் தெரிந்த நிலவை வெறித்திருந்தான்…
தொடரும்
{kunena_discuss:1120}