முதலில் தன் காதலை ஏளனபடுத்தினான். இப்போது, இவள் ஏதோ செய்ய கூடாது தவறை செய்து வாழ வழியில்லாமல் அவனிடம் தனக்கொரு வாழ்க்கை கொடுக்க வேண்டுமென மன்றாடியதை போலல்லவா பேசிவிட்டான். தன்மானத்தில் அடிவிழவும், இத்தனை நேரமாக ஜெய்யின் வாழ்க்கைக்காக இழுத்து பிடித்திருந்த பொறுமையும், ராகுல் மேலிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறந்தது.
“போதும்... நிறுத்துங்க ராகுல்! இன்னும் ஒரு வார்த்தை பேசுனீங்க உங்கள அறைந்தாலும் அறைந்திடுவேன். நான் என் காதலனை கண்டு பிடிக்கிறனோ இல்லையோ, கண்டிப்பா, உங்களை மட்டும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது” உக்கிரமாக பேசியவள் “வாழ்க்கை தரானாம் வாழ்க்கை... யாரு கேட்டா இவங்கிட்ட வாழ்க்கை வேணும்னு” அவனுக்கு கேட்கும்படியாக முணுமுணுத்தாள்.
“நல்லா யோசிச்சு தான் சொல்றியா, மையூ?!” என்றவனின் குரலில் குறும்பு குடியேறியிருந்தது.
‘நீ இன்னும் போகலையா’ என்பதாக ஒரு பார்வை பார்த்தவள்,
“இதில் யோசிக்க ஒன்னுமே இல்ல! உன்னை கல்யாணம் செய்றதுக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக நடக்க தொடங்கினாள்.
அவன் தன் காதலை குறைத்து மதிப்பிட்டதில் கொந்தளித்து கொண்டிருந்தவளிடம், அவனுடைய ‘மையூ’ என்ற அழைப்பு போய் சேரந்திருக்கவில்லை.
மைத்ரீயின் செயலில் கர்வம்கொண்டது அந்த காதலனின் மனம். இருக்காதா பின்னே! அவளின் மனதை வெல்ல முடியாமல் தோற்று போனான் என்று துவண்டிருந்த வேளையில் தனக்காக தன் மீதே கோபம் கொள்ளும் காதலியை கண்டவனுக்குள் ஊற்றெடுத்தது உற்சாகம்.
இரண்டே எட்டில் அவளுக்கு முன்னால் சென்று நின்றவனால் தேங்கி நின்றாள் மைத்ரீ.
“என்னதா வேணும் உங்களுக்கு?”
அவளின் எரித்து விடும் பார்வைக்கு, ஒரு வசீகர புன்னகையை பதிலாக்கியவன்
“நீதான் வேணும் என் அழகு மயிலே!”
அடுத்த நொடி மைத்ரீ கொடுத்த அறையில் சிவந்தது ராகுலின் கன்னம்.
இந்த எபி-ல வரும் பாட்டோட லிங்க்:
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}