“ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. என்னோட தென்றல் போடுறதை விட கொஞ்சம் சுமாராதான் இருக்கு.”
காந்திமதி அவளை முறைத்தார். அவள் அதைக்கண்டுகொள்ளாமல் தன் வேலையைச் செவ்வனே செய்தாள்.
“ஏக்கிழவி. நீ இன்னிக்கு எதுவும் செய்திடலையே. நேரம் ஆனாலும் பரவாயில்லை. என் செல்லமே வந்து செய்யட்டும்.”
தென்றல் தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே படுக்கையில் அவளது மகள் பூமிகா படுத்திருந்தாள்.
அவள் விழித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்பது அவளது விழி அசைவே காட்டிக்கொடுத்தது.
தனது தாய் வந்தது தெரிந்தும் எழாமல் இருக்கிறாள் என்றால் ஏதோ கோபம்.
அவள் பிடிவாதமாய் முகத்தை வைத்துக்கொண்டு படுத்திருப்பதைக் கண்டதும் அவளுக்கு கணவனது நினைவு வந்தது. அவனும் இப்படித்தான் செய்வான்.
பூமிகாவின் செயல்கள் எல்லாம் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் படுத்தி வைக்காம பாசமா பார்த்துக்கிட்டு இருக்காள்ல. அவளைச் சொல்லனும்.”
அதற்குள் தென்றல் வந்துவிட அவர்கள் வழக்காடல் நின்றது.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் தென்றல். அங்கே அவள் செய்வதற்கு ஏதுவாய் எல்லாவற்றையும் தயாராய் வைத்திருந்தார் காந்திமதி.