அவரிடம் அவள் வம்பிழுப்பது என்னவோ வேடிக்கைக்காகதான். இந்த வயதிலும் அவரிடம் காணப்படும் சுறுசுறுப்பு கண்டு அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவர் இருப்பதினால்தான் தென்றலால் மகளைப் பற்றிக் கவலைப்படாமல் வேலையில் திறம்பட ஜொலிக்க முடிகிறது என்று அவளுக்குப் புரியும்.
தங்கள் வீட்டு மருமகளின் தோழி என்று எண்ணாமல் தன்னையும் அந்த வீட்டில் ஒருத்தியாய் நினைத்துதான் அவர் தன்னிடம் வம்பிழுக்கிறார் என்று புரிகிறது.
தென்றல் அவளுக்காக எடுத்து வந்திருந்த பையை எடுத்தாள்.
அவளைக் கண்டதும் தம்பியும் தங்கையும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அவளிடம் ஓடிவந்தனர்.
எப்போதும் வடிவேல் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினால் எதுவும் வாங்காமல் வரமாட்டான்.
அவன் இறந்த பிறகு ஸ்டெல்லா அந்த வழக்கத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
">ஸ்டெல்லா. உன் கையை ஒழுங்கா வச்சிக்கிட்டு வர்றதானா சொல்லு. நான் அழைச்சுக்கிட்டுப்போறேன். இல்லைன்னா விட்டுட்டுப்போயிடுவேன்.”
“சரி. ஒழுங்கா வர்றேன்.”
சிறிது தூரம் அமைதியாய் இருந்திருப்பாள்.
“தென்றல்.”
“ம். என்ன?”
“எனக்கு ஒரு ஆசை.”