சிவா மேல தப்பிருந்தா அத அவர் எங்கிட்ட நிச்சயம் மறைக்கமாட்டாரு, சட்டத்த பாதுகாக்கிற பொறுப்புல இருக்கிறவரு.. செய்யுற தொழில தெய்வமா மதிக்கிறவரு பெண்மைக்கு உரிய மரியாதைய கொடிக்கிறவரு நிச்சயம் தப்பு செய்ய மாட்டாரு.. அன்னிக்கு இராத்திரி கூடா நான் தான் அவர தேடி போனேனே தவிர அவர் கண்ணியமாத்தான் இதுவரைக்கும் நடந்திக்கிட்டாரு இல்லையா..
மனைவி இழந்து மூணு வருஷம் ஆச்சு.. இழந்த ஒரு உறவிலருந்து வெளில வர இந்த கால அவகாசம் போதுமானதுனு நான் நினைக்கேன்.. அவர் என்னைய முழுமையா விரும்புறாரு.. நானும்தான்.. அவர்கிட்ட என்ன கொடுக்கிறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்ல காவீ,, அப்பா நினைக்கிற மாதிரி அவர் என்னைய ஏமாத்தீட்டு எங்கயும் ஓட மாட்டாரு..சொல்லப்போனா.. அன்புக்கு ஏங்கி இருக்கிற அவருக்கு அத கொடுக்கிறதுதான்.. உண்மையான அன்பு..இல்லையா..?”
“அப்போ அந்த மொட்டை மாடி ரொமான்ஸ் தப்பில்லங்கிற..” – காவ்யா உதட்டைக்கடித்து சிரிக்க, அவள் காதருகே குனிந்து, “காதலில் களவு.. நம்ம இலக்கிய மரபு.. அதுக்குமேல போனாலும் என்னப்பொறுத்தவரையில் தப்பில்ல…” அவள் காவ்யாவின் காதில் சொன்னதும் அவள்,” சிவ சிவ அபச்சாரம் அபச்சாரம்” என காதைப்பொத்திக்கொண்டு சிரித்தாள். “அப்போ அங்கிள் இதையே வச்சு உன்ன ப்ளாக் மெயில் பண்ணினா? அவங்களுக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில நீ என்னப் பண்ணுவ?”
அவளது காதுகளில் இருந்து மெதுவாக கைகளைப்பிரித்தெடுத்தாள் தர்ஷினி… அவள் நெற்றியோடு தன் நெற்றியை ஒற்றிக்கொண்டாள், “உனக்கு அப்பாவ பத்தி இன்னும் தெரியல, அப்படியெல்லாம் ஒரு இக்காட்டான நிலைக்கு என்ன விட மாட்டாரு, அவர பொறுத்தவரைல என்னோட வாழ்கைல எந்த சிக்கலும் வரக்கூடாது.. நிச்சயமா சிவாவ ஒரு நாள் புரிஞ்சுப்பாரு.. அவரோட சம்மதத்தோட எங்க கல்யாணம் நடக்கும்..அப்பா, நான், விஷ்ணு, செண்பகம் அம்மா, அப்புறம் அவங்க.. எல்லாரும் இந்த வீட்டுல சந்தோஷமா இருப்போம்…காவீ.. அப்போதும் இதே மாதிரி நீயும் ரிஷியும் வாங்க.. நான் சமைச்சுபோடுறேன் ஓ.கே வா…”
“ஏய், சைக்கிள் கேப்ல என்ன சாப்பாட்டு ராணினு சொல்ற, ம்ம்ம்”
“இல்லடி பெண்ணே.. உன்ன நான் அப்படிலாம் சொல்லுவேனா… செஞ்சுக்கொடுத்தா நல்லா சாப்பிடுவேணுதான் சொன்னேன்..” இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கிண்டலிடித்து சிரிக்க..
மாணிக்கம் மகளின் உரையாடல்களை படுக்கையறையிலிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.. அலை அலையாய் எழுந்த அவர் எண்ணங்களோடு விடியல் தொடங்கியது…
தொடரும்
{kunena_discuss:1120}