“என்ன பாப்பா நல்லா இருக்கியா.... அம்மா, அப்பாலாம் நல்லா இருக்காங்களா....”
“எல்லாரும் ரொம்ப ரொம்ப திவ்யமா நல்லா இருக்கோம்.... நீங்க எப்படி இருக்கீங்க....”
“எனக்கு என்ன பாப்பா கஷ்டம்... அந்த ஆண்டவனோட அருளால ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.....”
“சரி நாங்க கிளம்பட்டா... பதினோரு மணிக்கு கோர்ட்ல பார்க்கலாம்....”
“என்ன பாப்பா அதுக்குள்ள கிளம்பற... தம்பி யாரு.....”
“என்ன சார் இது... இப்படி பொசுக்குன்னு என்னைத் தெரியலைன்னு சொல்லிட்டீங்க.... என் பிஞ்சு மனசு உடைஞ்சு போச்சு போங்க.... உங்க ஆளுங்கள சொல்லி சொல்லி அடிச்சது நான்தான்.... ஒருத்தன் மூஞ்சில கூட்டல் குறி கூட போட்டேனே.... நீங்க பார்க்கலை... ஐயா கணக்குல வீக்கா.... எதுக்கும் ஒண்ணு, ரெண்டு, மூணு கத்து வச்சுக்கோங்க.... பின்னாடி கம்பி எண்ண வசதியா இருக்கும்...”
“தம்பி ரொம்ப தமாஷா பேசறீங்க ஆனா ஏதோ தப்பா புரிஞ்சுட்டு பேசறீங்க... அது எங்க ஆளுங்களே இல்லை... சரி இதை எல்லாம் உங்ககிட்ட எதுக்கு சொல்லிக்கிட்டு... கோர்ட்ல என்னோட வக்கீல் உங்களுக்கு எல்லாத்தையும் புரிய வைப்பார்.... அப்பறம் தம்பி நீங்கதான் அந்த வீட்டு மாப்பிள்ளைன்னு சொன்னாங்க... உடம்பை பத்திரமா பார்த்துக்கங்க.... நாம வழக்கு ஆரம்பிக்கும்போது சந்திக்கலாம்....”,என்றபடியே விடைபெற பாரதியும், சாரங்கனும் நாராயணனை முறைத்தார்கள்..... அவர்கள் பேசுவதை பார்த்தபடியே வந்த சந்திரன் பாரதியையும், சாரங்கனையும் முறைத்தார்...
தொடரும்
{kunena_discuss:1100}