(Reading time: 12 - 24 minutes)

"சிரிக்காத, எனக்கு பசிக்குது"

"பீட்சாவும் பர்கரும் வேணுமா?"

"நீ கொண்டு வந்திருக்கியா?"

"விளையாட்டா இருக்கா? புயலால் எவ்வளவு சேதம். எப்படி கடைகளை திறப்பாங்க?"

ஜெஸிகா மூச்சினை இழுத்து விட்டாள். "இப்போ என்ன செய்யுறது?"

"வயித்துல ஈரத்துணியை கட்டிக்கிட்டு கனவுல சாப்பிட வேண்டியது தான்"

"எனக்கு அல்சர் வேற இருக்கு"

"ஜான் எங்கே?"  

"என்னை கேட்டா? இங்க தான் எங்கயாச்சும் சுத்திட்டு இருப்பான். அவனை தேடாத. நம்மளை தான் தொல்லை பண்ணுவான்"

"அவன் இல்லாதது எனக்கென்னவோ....சம்திங் ராங்"

"தற்கொலை ஏதாவது செஞ்சுப்பானா?" 

"ச்சே ச்சே.. அந்த அளவுக்கு எல்லாம் அவனுக்கு தைரியம் கிடையாது. வேறு ஏதாவது வில்லங்கமா செய்வான்" என்று சுற்றும் முற்றும் பார்த்தான் வசந்த். தூரத்தில் நிழலுருவில் ஜான் மெதுவாக செல்வது அவனுக்கு தெரிந்தது.

"ஜான்.....!" வசந்த் கத்தினான்.

"என்ன வசந்த்?"

"அங்க என்ன செஞ்சிட்டு இருக்க?"

"தூக்கம் வருது. அதான் கார் ஷெட்ல தூங்க போறேன்"

"வீட்டுக்குள்ள தூங்கலாமே?"

"விருந்தாளிங்க தான் வீட்டுல தூங்கணும். நீங்க கார் எடுத்து வெளியே விட்டுட்டு உள்ள போய் தூங்குங்க"

"ஏதோ செய்ய போறான். ஆனா, அது என்னதுன்னு தான் தெரியல" வசந்த் ஜெஸிகாவிடம் முணுமுணுத்தான். 

கார் ஷெட்டில் மறைத்து வைத்திருந்த ஏதோ ஒன்றை தேடினான் ஜான். இருளில் சரியாக தெரியாததால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந்து நிமிட அவகாசத்தில் பொட்டலம் ஒன்று கிடைத்து, அதை பிரித்து பர்கரை வாயில் வைக்கும் நேரத்தில், திடீரென விளக்கொன்று அந்தரத்தில் எரிந்தது. சிகரெட் லைட்டரை பிடித்தபடி வசந்தும் ஜெஸிகாவும் நின்றிருக்க திறந்த வாயை மூடாமல் ஆ வென பார்த்தபடி இருந்தான் ஜான்.

தொடரும்...

Episode # 39

Episode # 41

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.