(Reading time: 33 - 65 minutes)

நல்லா இருக்காங்க இபோதான் அவர்களுக்கும் தூக்கம் வ்ருவகாருவதாக சொல்லி என்னை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுபினர்கள் என்று கூறிக்கொண்டே அவள் தங்கியிருந்த அறைக்கு முன் நிண்று கதவை திறந்தாள் அப்பொழுது அந்த பாடிகார்ட் ஆசாமி ஸ்டாண்டர்டீசில் விறைப்பாக நின்றபடி இருப்பதை பார்த்துக்கொண்டே கதவை உள்ளுக்குள் லாக் போட்டவள், என்னங்க நான் என்ன பொக்கிசமா முதல்ல நீங்க போட்டுருக்கிற பாடிகார்டை இங்கிருந்து போகச் சொல்லுங்க! என்னமோ பெரிய மினிஸ்டருக்கு பூனைப்படை காவலா விறைப்பா நிக்கிறமாதிரி ரூமுக்கு முன்ன நின்றுகிட்டு இருக்காங்க, இது எனக்கு ரொம்ப ஓவர் ஆக இருக்குது என்றாள்.

அவள் சொல்லி முடித்த மறுநொடி ஏய்..... இனி இப்படித்தான் இந்த ஆதித்தோட வொய்ப் என்றால் லேசா நீ! பொக்கிசம் தான்....! என்று கூறியவன் என் தொழில் எதிரிகளாலும் , அந்த மினிஸ்டர் காந்தனாலும் உனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு அழகி. எப்பொழுதும் என் பாதுகாப்பு ஏற்பாட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டதே புரியுதா? என்று கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும் மறுக்க முடியாமல் ம்...என்று ஒப்புதலாக அவனிடம் கூறினாலும் இதுபோன்ற பாதுகாப்பு அவளுக்கு அசெளகரியத்தையே கொடுப்பதாக இருந்தது .

அவள் டல்லாக பேசவும் அவளின் மூடை மாற்றும் விதமாக, யேய்... உனக்குத்தான் நிறைய பிரண்ட்ஸ் இருப்பதாக நீ சொல்வாயே நாளைக்கு காலையில் சிவன் கோவிலில் வைத்து 9;30 நம்ம கல்யாணத்துக்கு இன்வைட் செய்துடு, பிறகு உனக்கு கல்யாணத்திற்கு எடுத்த சாரி ஜூவல்ஸ் எல்லாத்தோட போட்டோசும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன், வாங்கும்போது உன் அபிப்ராயம் கேட்க்க கால் பண்ணினேன், நீ அம்மா கிட்ட இருந்ததினால் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்ப போல, இப்போ பார்த்து ஏதாவது மாத்தணும் என்றால் பிப்டீன் மினிட்ஸகுள்ள சொல்லு. அதுக்குள்ளே சொன்னா மட்டும்தான் என்னால் மாற்ற முடியும் என்று கூறியவன், ஓகே பேபி நைட் 11;30 கு உன் வீட்டில் இருந்து வருகிறவர்களை ரிசீவ் செய்து தங்க வச்சுட்டு முருகன் மாமாவை டுடே நைட் ஹாஸ்பிடலில் இருக்கச்சொல்லிவிட்டு உன்னை வீட்டிற்கு கூப்பிடுக்கொண்டு வர வருகிறேன் என்று சொல்லிகொண்டிருக்கும் போதே எனக்கு முக்கியமான கால் வருது, பை! கிளம்பி ரெடியா இரு என்றவன் தொடர்பை துண்டித்துவிட்டான் .

ழகுநிலாவின் அண்ணி வாணிக்கும் இது தான் முதல் விமானப்பயணம் எனவே மனதிற்குள் இங்க பாருடா ஓடுகாளிக்கு வந்த வாழ்வ.... ஏரோ பிளேனில் டிக்கட் போட்டு கூப்பிட்டுப்போகிற பணக்காரனாத்தான் புடுச்சிருக்கா! பிறகு என்ன வீட்டில் உள்ள நகை எல்லாம் இந்த அத்தை அவளுக்கே கொடுத்திடனும் என்று தூக்கிட்டு வந்துட்டாங்க. அடியாத்தி...! எம்பது பவுனு நகை சேத்து வச்சுருக்கேன்னு என்கிட்ட இத்தனை நாள் மூச்சு விட்டுச்சா இந்த அத்தைகாரி. நான் கல்யாணம் முடிச்ச இந்த மூணு வருஷம் எத்தனை நல்லதுக்கு போயிருப்பேன் ஒருதடவையாவது இத போட்டு போ..... என்று என் கண்ணில் காமிச்சிருக்குமா இந்த அத்தை என்று நினைத்தபடி அந்த விமான பயணத்தை அனுபவித்துக்கொண்டு வந்தவள், வாணி அங்க எங்க வேடிக்கப் பார்த்துகிட்டு இருக்க புள்ளைய வாங்கு அம்மாட்ட இருந்து, அவங்களால தூக்கிட்டு நடக்க முடியல நான் போய் சாமான்களை எடுத்துட்டுவருகிறேன் என்று கூறி நகர்ந்தான்

அதற்குள் வாசலுக்கு தன மகனை வாங்கிகொண்டு வந்தவர்களின் முன்பு ஆதித்தின் ட்ரைவர் வந்து நின்றான் அவன் மொபைல் வீடியோவில் அழகுநிலாவின் அம்மா மற்றும் அண்ணன் அண்ணி புகை படத்தை ஆதித் அனுபியிருந்தான் அவன் அடையாளம் தெரிந்துகொள்ள

ஏ புள்ள வாணி இங்கிட்டு நிப்போம் குமரேசன் வரட்டும் சேர்ந்து போவோம் என்றபடி ஓரமாக நின்றவர்களின் அருகில் வந்த ஆதித்தின் ட்ரைவர் வணக்கம் அம்மா என்னை ஆதித் ஐயா உங்களை கூடிக்கொண்டு வர அனுப்பிவைத்தார் என்றான்.

அதற்குள் குமரேசன் அங்கே வந்ததும், இங்க பாருங்க நமக்கு கிடைக்கிற மரியாதையை நம்ம தகுதிக்கு மீறி இந்த அழகுநிலா அவளுக்கே மாப்பிள்ளை தேடிகிட்டதால நாம முதல்முதலா மாப்பிள்ளை வீட்டிற்கு வருறோம் அப்படியிருந்தும் வீட்டில் இருந்து ஒருத்தரும் வராம வேலைக்காரனை விட்டு கூப்பிட்டுக்கொண்டு வரச்சொல்றத, கல்யாணத்துக்கு முன்னாடியே ஜோடிபோட்டுகிட்டு மாப்பிள்ளை வீட்டில் இருந்தா நமக்கு இப்படித்தான் மரியாதை கிடைக்கும் என்று வாணி கூறினாள்.

குமரேசா அவளை வந்த இடத்தில வாயமூடிகிட்டு இருக்கச்சொல்லு நாம போனமா கடமைய முடிச்சமா! கிளம்புனும்மானு! இருக்கணும் என்னை மீறி போனவள என்னால் மன்னிச்சு ஏத்துக்க முடியாது. அதுக்காக இவளை அப்படியே விட்டா ஊருல உள்ளவங்க ஓடிபோய்ட்டலா உன் மவனு கேட்டுடகூடாது. அதுக்கு நாமே முடிச்சுவச்சமாதிரி தெரியனும் என்ற ஒரே காரணத்துக்ககத்தான் அவளுக்கு செய்யவேண்டிய கடமையை செஞ்சு முடிச்சுட்டு போக வந்திருக்கிறேன் என்றாள் ராசாத்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.