ஜானகி ஹாஸ்பிடலில் இருந்ததால் முதலிலேயே அய்யரிடம் அவன் அன்னை ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தைக் கூறி கல்யாணத்தின் போது உறவுகளை வைத்து செய்யும் சடங்குகளை தவிர்த்து கெட்டிமேள சத்தத்துடன் மாங்கல்யம் ஆதித் அழகியின் கழுத்தில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்யாணம் முடிந்ததும், கடவுளை வாங்கிவிட்டு வேலாயுதத்திடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் ராசாத்தியிடம் ஆசிர்வாதம் வாங்க முயன்றபோது அதெல்லாம் வேண்டாம் தம்பி என்று ஆதித்திடம் கூறியவள், தாம்பாளத்தில் அழகுநிலாவிற்கு சேர்த்துவைத்திருந்த நகை மற்றும் ஒருலட்ச்சம் ரொக்கப்பணத்தை இருவரின் முன்னும் வாங்கிக்கொள்ளும்படி நீட்டினா.
அழகி அதை வாங்க கையை தூக்க முயன்றபோது ஆதித் அவளின் கை பிடித்து தன கையோடு சேர்த்துக்கொண்டு எனக்கு உங்க ஆசீர்வாதமும் உங்க பொண்ணும் மட்டும் போதும். வேற எதுவும் வேண்டாம் என்றான்.
உடனே ராசாத்தி, நான் என் கடமையை செய்றேன் தம்பி. இதெல்லாம் அவளோடது. அவங்க அப்பா அவள் பிறந்தபோது இதெல்லாம் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வைத்தது. உங்கள் வசதிக்கு இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் என்னை போன்ற சம்சாரி வீட்டில் எண்பது சவரன் நகை சேர்ப்பது என்பது எளிதல்ல. இது அவங்க அப்பாரு மக கல்யானத்தை சிறப்பா செய்றதுக்கு சேர்த்தது. வேண்டான்னு சொல்லாதீங்க என்றாள்.
அதற்கு மேல் மறுக்கமுடியாமல் அழகுநிலாவை அதனை வாங்கிகொள்ள அனுமதித்தான். எங்களுக்கு திருநீறு பூசிவிடுங்கம்மா என்று அழகுநிலா காலில் விழுந்ததும் ஒரு எட்டு பின்னால் நகர்ந்துகொண்டாள் ராசாத்தி. அழகுநிலாவிடம் பேசாமல் ஆதித்திடம், சாமிசன்னதியில முடிச்ச கல்யாணத்திற்கு அந்த கடவுள் அருள் கிடைக்கும் தம்பி, உங்க வீடுக்காரம்மாவை எழுந்திரிக்கச்சொல்லுங்க என்றவர் தனது மகனின் அருகில் நின்றுகொண்டாள்.
தன அம்மாவின் இந்த புறக்கணிப்பால் கண்களில் கண்ணீன் நிரம்பி தழும்பியது அழகிக்கு. அவள், தன அம்மாவிடம் விளக்கம் அளிக்க முயன்றநேரம் வேலாயுதம் கோவிலில் வைத்து வேறு பேச்சுவார்த்தைகளை தவிர்க்கும் நோக்கத்த்டன் அவர்களின் அருகில் வந்தவர், அழகுநிலா இப்போ வேற எதுவும் பேசவேண்டாம். இங்க ஆதித் கல்யாணம் நடக்கப்போவதை தெரிந்த பிரஸ் காரங்க இங்க வந்துவிட்டர்கள், நம்ம ஆட்கள் வெளியில் அவங்களை சமாளித்து கொண்டிருகிறார்கள். இப்போ ஜானகிடம் ஆசிர்வாதம் வாங்க புறப்பட வேண்டும் ஆதித்.... என்று கூறியவர், சம்மந்தியம்மா...! ஜானகி உங்களை பார்க்கணும் என்று சொன்னார்கள். நீங்களும் அழகியின் அண்ணனும் எங்களுடன் ஹாஸ்பிடலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சமூதாயத்தில் பெரியமனிதர் தன்னிடம் வைக்கும் கோரிக்கையை தட்ட முடியாமல் ராசாத்தி குமரேசன் மற்றும் வாணியுடன் மருத்துவனைக்கு வர கிளம்பினர்
அதில் மகிழ்ந்த அழகுநிலா, ஆதித் ப்ளீஸ்.... நான் அம்மா அண்ணன் கூட காரில் வருகிறேனே! எனக்கு அவங்க கூட பேசனும் என்று கேட்டாள்.
அழகுநிலா அவர்களின் வீட்டாரை பார்த்ததில் இருந்து தன்னை பார்க்கும் போது தோன்றும் அவளின் கண்களின் மின்னல் தொலைந்து போனதை உணர்ந்திருந்த ஆதித்துக்கு அவளின் கண்களில் தன்னைப்பார்த்து ஏற்படும் அந்த மின்னலை மீட்க்க விரும்பினான்.
ராசாத்தியும் குமரேசனும் வந்ததில் இருந்து அவளிடம் முகம் கொடுத்து பேசாததை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தான் ஒரு ஒட்டாத தன்மையுடன் கடமையை முடித்துகொடுக்கவேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் இருப்பதையும் புரிந்து கொண்டான்.
அதனால் அழகுநிலாவின் மனம் காயம்படுவதை பார்த்து தற்போது எதுவும் அதற்குதான் செய்யமுடியாத சூழலின் இருந்த ஆதித், இவளுக்காக இங்க நான் ஒருத்தன் தவித்துகொண்டிருகிறேன். இவள் என்னடா.... என்றால் அவளுடன் முகம் திருப்புபவர்களுடன் போகணும் என்று சொல்கிறாளே! என்று கடுப்புடன் நினைத்துக்கொண்டான்.
எனவே ஏய் இப்போதான் தாலிகட்டியிருகிறேன் அதுக்குள்ள உன் ஹனியை விட்டுட்டு உன் அம்மாபின்னாடி போகணும்னு நினைக்கிறேயே! என்னை பார்த்தா உனக்கு எப்படியிருக்கு? என்று கடுப்புடன் கேட்டான்
அப்பொழுது அவர்களின் அருகில் வந்த வேலாயுதம் என்ன ஆதித் மருமகளிடம் கோபமாய் பேசுகிறாய்? என்று கேட்டார். ஆதித் பேசும் முன் மாமா நான் ஹாஸ்பிடல் வரும்போது, அம்மா, அண்ணன் கூட காரில் வருகிறேன் என்று சொல்கிறேன் இவர் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார். நான் அவங்களிடம் தனியா பேசணும் அதற்கான சந்தர்பம் நேற்றில் இருந்து முயற்சிக்கிறேன் எனக்கு கிடைக்கவே இல்லை என்று கூறினாள்.
அப்பொழுது அவர்களிடம் வந்த குமரேசன் எந்த ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறீர்கள் நானும் அம்மாவும் வர டாக்சி வந்துருச்சு, எங்களுக்கு மதியம் 2மணிக்கு ஊருக்கு போக பஸ் டிக்கட் எடுத்தாச்சு. அதனால் சீக்கிரம் மாப்பிள்ளையின் அம்ம்மாவை போய் பார்த்துட்டு கிளம்பனும் என்று சொன்னதும் ஹஸ்பிடலின் பெயரை கூறிய வேலாயுதம் அழகுநிலா நீயும் அவங்க கூட ஹஸ்பிடளுக்கு அவங்க காரிலேயே வந்துவிடு என்று கூறினார்.