(Reading time: 33 - 65 minutes)

அம்மா என்ற சத்தத்துடன் உள்ளே அழகி வருவது தெரிந்ததும் ராசாத்தி கண்ணை இருக்க மூடி தூங்குவதை போல் படுத்துக்கொண்டாள். அம்மா.... என்று வந்தவள், அங்கிருந்த கட்டிலில் ராசாத்தி படுத்திருப்பதை பார்த்து மீண்டும் அம்மா என்று சத்தம் கொடுத்தபடி சென்றாள். அவள் எழுந்துகொள்ளாததை பார்த்தவள் திரும்பவும் அம்மா.... என்று கூப்பிட்டபடி எழுப்பபோகும் பொது அவளின் பின் விரைவாக வந்த ஆதித் ஏய் எதுக்கு இவ்வளவு தூரம் ட்ராவல் செய்து அழுப்பா தூங்குரவங்களை எழுப்புற? காலையில் எழுந்ததும் உன்னை பார்க்க வரப்போராங்க என்று கூறி அவளின் கை பிடித்து வெளியில் கூப்பிட்டுகொன்டுவர முயன்றான் ஆதித்.

அழகுநிலா தன்னை பார்த்து பேசுவதற்கு தன வீட்டார் ஆவலாக காத்திருப்பார்கள் என்றே ஓடிவந்தாள். ஆனால்..... அப்படி இல்லாமல் தூங்குவதுபோல் தெரியவும் என்னை கூப்பிடுகொண்டு வருவதாக சொல்லிவிட்டு இவர் வந்ததாகதானே சொன்னார். இத்தனை நாள் நான் என்ன செய்தேன்! எங்கிருந்தேன்! என்று என்னை கேள்விகேட்காமல் எப்படி இவங்கலால் தூங்க முடிஞ்சது என்று கவலையுடன் அண்ணனையாவது பார்த்து பேசிவிட்டுவருகிறேனே என்று அடுத்திருந்த அறைக்கு போவதற்காக திரும்பினாள், அவளை இழுத்துக்கொண்டு வெளியில் வந்த ஆதித், யேய்... அறிவு இருக்காடீ இப்போ நைட் ஒருமணியாகப்போகுது. அவங்க குடும்பமா கதவை பூட்டி தூம்குறாங்க இப்போ போய் டிஸ்டப் பண்ணலாமா? என்று கேட்டான்.

என் அண்ணன்தானே எந்நேரமானாலும் அத்துடன் பேசுவேன். அதை அவர் தொந்தரவாக எல்லாம் நினைக்க மாட்டாங்க என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே அவங்க அப்படி சொன்னாலும் இந்த நேரம் அவங்களை டிஸ்டப் பண்ணுவது நாகரீகம் இல்லை அழகி, நானெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு நைட் ஒருமணிக்கு மேல என் வொயப் கூட எப்படி இருக்கனும் என்று நினைப்பேனோ அது மாதிரிதானே மத்தவங்களும் இருப்பாங்க, அவங்களை டிஸ்டப்பன்னலாமா? என்று அவளை திசை திருப்புவதற்காக அவளின் கை பிடித்து தனது அருகில் இழுத்து மெதுவாக ஹஸ்கிவாய்சில் அவளிடம் கூறினான்..

அந்த ஹாலில் இருந்த சீரோ வாட்ஸ் அலங்கார லைட்டின் வெளிச்சத்தில் யாருமற்ற இடத்தில் அவனின் உடையில் இருந்து வந்த பெர்பியூம் வாசமோ அல்லது அவனின் சூடான ஸ்பரிசமோ எதுவோ ஒன்று அவளை பேச்சில்லாமல் உறையச் செய்தது. அவளின் நிலையை அறிந்த ஆதித், ஓரு மயக்கும் புன்னகையுடன் நீ இப்படியே பார்த்துக்கொண்டு நின்றால் உன்னை நான் தூக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கும், உனக்கு அப்ஜெக்க்ஷன் இலையென்றால் நான் தூக்கிட்டு போகவா...? என்று கேட்டான் ஆதித் .

அவன் அவ்வாறு கேட்டு தூக்குவதற்காக கை கொண்டு சென்றதும், அடியாத்தி வேணாம்! வேணாம்! நானே வருகிறேன் என்றவள், அவன் தன அண்ணனை எழுப்பக்கூடாது என்று காரணம் கூறவும் அவளால் அதன் பின் அவன் அண்ணனை எழுப்ப சங்கடமாக இருந்ததால், வீட்டார்களிடம் பேசமுடியாத ஏக்கத்தோடு ஆதித்தின் பின்னால் நடந்தாள்..

றுநாள் மணவறையில் தன அருகில் அமர்ந்திருந்த அழகுநிலாவை பார்த்தான் ஆதித், அழகுப் பதுமையாக உட்கார்ந்திருந்தாள். ஆனால் அவளின் முகம் அந்த மகிழ்ச்சியை பிரதிபலிக்கவில்லை. காலை எழுந்தது முதல் தன வீட்டாருடன் பேச அவளும் முயன்றுதான் பார்த்தாள். ஆனால் ராசாத்தியோ செய்யவேண்டிய கடமையை மட்டும் செய்தாள். அழகியின் முகத்தை பார்க்கவே இல்லை. அவள் அண்ணனும் அவன் அம்மாஅளவு இறுக்கமாக இல்லாவிட்டாலும் எப்படி இருக்கேங்க அண்ணா? என்று நடுங்கிய குரலுடன் கேட்ட அவளிடம் பதில் கூறாமல், வாணி நம்ம எல்லோரும் நால்லா இருக்கோம்னு சொல்லிபுடு. பிறந்த இடத்தின் மானத்தை காதில பறக்கவிட்டமாதிரி அவளையும் நம்ம குடும்பத்தைவிட்டு நாம பறந்து போகவிட்டுடோம்னு சொல்லு என்று ஜாடையாக கணத்த இதயத்துடன் பேசினான்.

அவனிடம் அப்பொழுது தனது நிலையை விளக்க முடியாமல் கல்யாணத்திற்கு ரெடியாக இருந்தவளால் வேறு எதுவும் பேசமுடியவில்லை. ஆனாலும் அவள் வீட்டாரின் இந்த புறக்கணிப்பு, அதுவும் கண் முன்னே நின்றுகொண்டு செய்வதை அவளால் தாங்க இயலவில்லை. ஆனால் தன வருத்தத்தை வெளிப்படையாக காமிக்கமுடியாமல் மணப்பெண்ணாக நின்றுகொண்டிருந்தாள்.

ஆதித்தும் அவளின் மனவருத்தத்தை உணர்ந்தே இருந்தான். இருந்தாலும் அவனாலும் அப்பொழுது அவளுக்கு ஆறுதலோ! அவளின் வீட்டாரை சமாதானப்படித்தி அழகுநிலாவுடன் பேசவைபதற்கான சூழலோ இல்லாததால் அவளுடன் நெருங்கி நின்று அவளுடன் பேச்சுகொடுத்து அவளை இயல்பாக்க முயன்றுகொண்டிருந்தான்.

சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்த மாங்கல்யத்தை அய்யர் எடுத்துக்கொடுத்த தாலியை அழ்குநிலவின் கழுத்தில் கட்டினான். கோவிலுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதித்தின் பி ஏ.முருகன் மற்றும் வேலாயுதத்தின் குடும்ப வகையில் என்று சிலபேர் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தனர். மற்றவர்களை அவனது ஓ எம் ஆர் வீட்டின் விருந்திற்கு அனுப்பியிருந்தான் ஆதித்தின் பிஏ. அங்கு அவர்களுக்கு கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

ஆதித்துக்கு அழகுநிலாவை மனைவியாக ஏற்றுகொண்ட அந்த நொடியை அனுபவித்து மகிழ்ந்தான். ஆனால் அழகுநிலாவோ தன அம்மா மற்றும் அண்ணனின் முகத்திருப்பலே அவளின் மனதை அழுத்தியது. அவளால் அவள் ஆதித்தின் மறுபாதியானதை முழுவதுமாக உணரக்கூட இல்லை. இயந்திரம்போல் இருந்தது அவளின் செயல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.