அன்னம் எதுவும் கூறாமல் அமைதி காத்தாள்.வேந்தனின் கவனம் முழுவதும் தேன்நிலாவின் மேல் மட்டும் தான் இருந்தது.
அந்த குழந்தையின் அழகை பார்த்தவன்,தேன்நிலாவின் அருகில் வந்தவன் அவளை அன்று போல் தொட்டு பார்த்தான்.
அவனை தடுக்க அவனது அன்னையும் சரி,அவனது பாட்டியும் சரி தடுக்க வில்லை.
அவன் சின்னபையன் அல்லவா..
“அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி”
“அத்தை இந்த பாப்பா யாரு..,நாம அன்னைக்கி பார்த்தோமே அந்த பாப்பாவா..”என்று கேட்டான்
வேந்தான்.
“ஆமாடா..”என்றாள்.
“பாப்பா வளர்ந்துச்சுல..,அன்னைக்கி ரொம்ப சின்னதா இருந்தா இன்னைக்கி இவ்வளவு வளர்ந்துட்டா..”என்று அவன் கூற
“அப்படியெல்லாம் சொல்லகூடாது வேந்தா,பாப்பாக்கு கண்ணு விழுந்துடும்...” என்று அன்னம் தனது மருமகனுக்கு கூறினால் அன்னம்.
“அத்தை பாப்பா பேரு என்ன..”என்று வேந்தன் கேட்க
“தேன்நிலா..”என்று கூறினால் அவள்
“நிலா..நிலா..”என்று அவளை அழைத்தான் வேந்தன்.
அவனை பார்த்து தனது பொக்கைவாய் தெரிய சிரித்தால் தேன்நிலா.
தன்னவன் என்று அவளுக்கு இப்பொழுதே தெரிந்துவிட்டது.
அன்னம் வேந்தனை அழைத்துக் கொண்டு தனது இல்லத்திற்கு சென்றுவிட்டாள்.
தேன்நிலாவை பாய் விரித்து அவளை படுக்கையில் கிடத்தினால் அன்னம்.
தேன்நிலாவின் அருகினிலே அமர்ந்துக் கொண்டான் வேந்தன்.அவனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீட்டை பெருக்க துவங்கினால் அன்னம்.
தேன்நிலாவுடன் அவன் விளையாட ஆரம்பிக்க,கவுற ஆரம்பித்தால் நிலா கவுந்துக் கொண்டாள்.
“உனக்கு தெரிந்த மொழியில்
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை..”
அவளுடன் பேசிக்கொண்டிருந்தான் வேந்தன்.
“நிலாபாப்பாக்கு..என்ன வேணும்..”என்று அவன் கேட்க
அவளோ அவனை பார்த்து சிரித்தால்,பாப்பா எதுக்கு சிரிக்குது எனக்கு தெரிலியே என்று யோசித்தவன்..,”அத்தை பாப்பா எப்ப பேசும்..”என்று கேட்க
“இன்னும் கொஞ்ச நாளுல பேச ஆரம்பிச்சிடுவா வேந்தா..”என்று கூறினால் அன்னம்.
“அத்தை பாப்பா சிரிக்குறப்ப குழிவிழுது அத்தை..” என்றான் வேந்தன்.
திரும்ப தேன்நிலாவிடம் வந்த வேந்தன்,”நிலா நீ பேச இன்னும் கொஞ்ச நாள் ஆகுமா..,நான் பேசுறது உனக்கு புரிதா..,சிரிக்குற..”என்று அவளது கைகளை பிடித்துக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான் வேந்தன்
“இருந்தும் நமக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி..”
அவன் விளையாடி கொண்டிருக்கும் பொழுதே கௌதம் தனது தங்கையை தேடி வந்தான். அவனது இப்போதைய உலகம் அவளது தங்கை மட்டுமே..
தனது தங்கை அருகில் வேந்தன் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அது பிடிக்கவில்லை.
இவர்கள் அப்பா இருவருக்கும் எப்படி புடிக்கவில்லையோ அது போல தான் இவர்கள் இருவருக்கும் ஆகாது.
தேன்நிலா அருகினில் சென்றவன்,”டேய் வேந்தா என் பாப்பாகிட்ட எதுக்குடா வந்த..,அவ கைய விடுடா..”என்றான் கௌதம்.(டேய் கௌதம் வாழ்க பூரா அவன்தான்டா கைய புடிக்க போறான்...,இது தெரியாம..போப்பா போ..)
“டேய் அவ ஒன்னும் உன்னோட பாப்பா இல்ல,எங்க அத்தை பாப்பா அதனால நான் அவளை பார்த்துக்குறேன்...”என்றான் வேந்தன்.
“பெரியம்மாவுக்கு பொண்ணு,எனக்கு பாப்பா புரிதா,அப்பறம் உனக்கு எப்படிடா பாப்பா..”என்று கூறியவன் நிலாவின் கைகளை வேந்தனது கைகளிலிருந்து பிரித்துவிட்டான்.
அவன் அவ்வாறு செய்ததும் வேந்தனுக்கு அளவுக்கடந்த கோபம் வந்தது,இப்பொழுதே தேன்நிலாவை அவனிடமிருந்து பறித்து அவனது வீட்டிற்கு கொண்டு செல்லும் கோபம் வந்தது அவனுக்கு.
கௌதமை முறைக்க பார்த்துக் கொண்டிருந்தான் அவன்
“தேனுகுட்டி அண்ணாவ பாருங்க..,பாப்பாவ பார்த்து பாப்பா சிரிக்குது...”என்று அவளது கைகளை பிடித்து கொஞ்சியவன்,அவளது கன்னத்தில் முத்தமும் இட்டான்.