மாணிக்கம் இந்த சம்பவங்கள் எல்லாம் எங்களோட வேதனையான நாட்கள், அதை நினைவு கூர்ந்து பார்க்கிறதுகூட நாங்க விரும்பல யார்கிட்டேயும் இது வரைக்கும் நாங்க வெளிப்படுத்தாத விசயங்கள் இத உங்கக்கிட்ட சொல்றதே சிவாவோட நல்ல குணத்தை நீ புரிஞ்சுக்கனும், அவன் மேல உள்ள அபிப்ராயத்தை மாத்திக்கனும்னு தான்!
“எங்க மக சிவா வீட்டுல வச்சு பச்சைக் குழந்தைய கொல்ல முயற்சி பன்னினா, அத பார்த்துட்டு தாங்க முடியாத சிவா, அவள முதல் முறையா கன்னத்தில இரண்டு அடி அடிச்சுட்டன், அவ கத்தல் தாங்க முடியாம நாங்க அவளை ஒரு ரூம்ல போட்டு பூட்டி வச்சோம், அது தான் நாங்க அவள கடைசியா பார்த்தது. மறுபடி அவள பார்க்கிறப்ப அவ தற்கொலை செஞ்சுக்கிட்டா…”
மாணிக்கத்தின் கண்களிலும் கண்ணீர், சில மணித்துளிகள் அமைதி.
“சிவாவுக்கு வேண்டாத சில பேர், தொழில் போட்டி காரணமா அத கொலைனு மாத்தி பிரச்சனை செஞ்சாங்க.. ஏதேதோ போராட்டம்.. எல்லாம் முடிஞ்சு நாங்க விஷ்ணுவ வளர்த்திக்கிறோம்னு சொன்னப்ப, சிவா மறுத்துட்டான். விஷ்ணு சிவாவோட குழந்தை இல்லை, அந்தப்பையன் என் பெண்ணோட ஒரு நல்ல வாழ்கைய வாழல அவன் பார்த்ததெல்லாம் நரகம் தான். இன்னைக்கு வரைக்கும் அவன் விஷ்ணுவ தன் கண்ணுக்குள்ள வச்சுப்பார்த்திக்கிறான்..”
“வேறொரு கல்யாணத்தைப் பத்தி அவன் இவ்வளவு நாளா யோசிக்கல இப்ப தர்ஷினி அவன் வாழ்கைல வந்திருக்கா, உண்மையான அன்பும் காதலும் அவனுக்கு கிடைச்சிருக்கு எங்கள பொறுத்தவரைல தர்ஷினிய அடைய அவனுக்கு எல்லா தகுதியும் இருக்கு, அதே மாதிரி தர்ஷினிமாதிரி சாந்தமான பெண்ணுக்கு சிவா சரியான துணை, ஒரு மனிதனோட கடந்த காலத்த வச்சு அவனோட வருங்காலத்தை அழிக்கக்கூடாது… நீ சரினு சொன்னா சிவாவோட வாழ்கை தொடங்கும்…இனிமே முடிவு உன் கைல தான்.. நீ தான் யோசிக்கனும்…!”
அனைவரும் அமைதியாக மாணிக்கம் தன் சேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.
தொடரும்
{kunena_discuss:1120}