“அப்படின்னா.. இதுனாலே எந்த பாதிப்பும் கிடையாதா? அப்புறம் ஏன் கிளாஸ்லே உள்ளவங்க எல்லாம் எங்கிட்ட குறை இருக்குன்னு சொல்றாங்க.. மத்த எல்லோருக்கும் தனி தனியா பிரக்டிகல் வச்சா, எனக்கு மட்டும் இன்னும் ஒருத்தரோடு சேர்த்து வைக்கறாங்க?”
“ஹ்ம்ம்.. அது நீ இப்போ பிரக்டிகல் கிளாஸ் போனா, கிட்சேன் வேலைன்ன, காஸ் ஆன் பண்ணிட்டு ஆப் பண்ண மறந்திட்டா அதனால் நிறைய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் .. அதான் கொஞ்சம் ரிஸ்கியான விஷயங்களுக்கு உனக்கு கூட ஒருத்தர் சேர்த்துக்க சொல்லி நாங்கதான் சொல்லிருக்கோம்”
“அப்படியா.. அப்போ எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை இல்லியா? நான் நார்மல் கேர்ள் தானே”
“நிச்சயம் நீ நார்மல் தான்.. ஆனால் எந்த இடத்திற்கும் தனியா மட்டும் போக கூடாது சரியா? நான் சொன்னா நீ கேப்பதானே”
“சரி அத்தான்.. அப்புறம் .. நான் இது எல்லாம் வீட்டில் சொல்லல.. அப்பா, அம்மா எல்லாம் கவலைபடுவாங்க. அண்ணா கிட்டேயும் கேட்கல. .அவன் டாக்டர்க்கு படிக்கிறானா.. அவன் படிச்சது எல்லாம் எனக்கு டெஸ்ட் பண்ணி பார்த்துருவான்.. “ என்று கண்ணடிக்க, சிரித்தபடி அவளை காலேஜ் வாசலில் இறக்கி விட்டான்..
அவள் இறங்கவும், அவளின் அருகே அவள் தோழியான, சந்தோஷின் மகள் சைந்தவி வருவதை பார்த்துவிட்டு, அவளுக்கு கைகாமித்து விட்டு சென்றான் ஷ்யாம்..
அவன் மனமெல்லாம் மித்ராவின் நினைவுகளே.. இதோ இப்போது கூட அவள் அத்தனை சீரியஸ்சாக பேசிக் கொண்டு இருந்தாள். உடனே அதை மறந்து விட்டு இப்போது ஜாலியாக பேசி சிரிக்கிறாள். அவளின் இந்த சிரித்த முகத்திற்காக தான் அவளிடம் எதையும் காண்பித்து கொள்வது இல்லை.
அவள் எண்ணுவது போல் அவள் நிலை அவர்கள் குடும்பத்திற்கு தெரியாதது அல்ல.. அவளை தவிர எல்லோருக்குமே தெரிந்த விஷயமே.. இன்னும் சொல்ல போனால் அவளை அதை உணர விடா வண்ணம் எல்லோரும் நடந்து கொள்வார்கள்.. அவளுக்காகவே அவள் அண்ணன் அஷ்வின் நரம்பியலை மேற்படிப்பாக படித்துக் கொண்டு இருக்கிறான்.
கல்லூரி சேர்ந்த பின் அவளுக்கு சற்று பிரச்சினை தான் என்று புரிந்தது.. அவ்வப்போது யாராவது ஏதாவது சொன்னால், ஷ்யாமிடம் சொல்லுவாள். அவன் அவளை சமாதானபடுத்தி அனுப்புவான்..
இப்போதுதான் அவளே நெட்டில் தேடி இருக்கிறாள் என்னும்போது சற்று அதிகமாகவே பேசியிருக்க வேண்டும் என்று தோன்றியது..
இப்போதைக்கு அவளை சரி செய்தாலும், இனிமேல் என்ன என்ன பிரச்சினைகள் வருமோ என்று அவனின் சிந்தனை சென்றது.
தொடரும்
{kunena_discuss:1187}