"ஐயோ!இது வேற உயிரை வாங்குதே!யாராவது போனை எடுங்களேன்!"சோபாவில் படுத்துக்கொண்டு தலையணையை அணைத்தப்படி புலம்பினான் உடையான்.விசித்ரம் யாதெனில் தொலைபேசியோ அவனிடமிருந்து அரையடி தொலைவு தான் இருக்கும்.அது எவ்வளவு கூப்பாடு போட்டும் அவன் மனம் இறங்காததால் அழைத்தவன் எவனோ அவன் உடையானின் கைபேசியையே துன்புறுத்தினான்.
"ஐயயோ...!"எரிச்சலுடன் எடுத்து காதில் வைத்தான் உடையான்.
"ஹலோ!"
"................"
"ஆ...ஆ....அப்படியா?ஐயயோ!செத்தேன்!"
"............"
"எங்கே அவரு?"
".............."
"போச்சா!சரி..சரி...நான் அம்மாக்கிட்ட சொல்லிடுறேன்!"
"..............."
"ஒண்ணும் பிரச்சனை இல்லை!எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்!ஆ...ஆ...சரி...சரி!!"இணைப்பைத் துண்டித்தான் அவன்.
"மோவ்!மோவ்!எங்கே இருக்கீங்க?முக்கியமான விஷயம்...!"பரபரப்புடன் தன் தாயை தேடி சென்றான் வசந்தமான நீண்ட நாள் எதிர்நோக்கிய செய்தி ஒன்றை கூற!!!!
தொடரும்!
{kunena_discuss:1163}