(Reading time: 9 - 17 minutes)

காலிங் பெல் சத்தம் அவர்கள் பேச்சின் நடுவே புகுந்தது. ஆகாஷ் கதவை திறந்தான். சாரு நின்றிருந்தாள்.

“ஹாய்” என்றாள் சற்றே ஏளனமாய்

வியப்பால் புருவம் உயர்ந்து “கெட் லாஸ்ட்” மனம் சொல்ல “வா” என தலையசைத்தான் வார்த்தைகளை விரயமாக்காமல்.

“நாம இருக்கிறது ஐஸ்சும் ஐஸ்சை சார்ந்த இடமும் . . ஆனா உனக்கு ஏன் என்னை பாத்ததும் இப்படி வேர்க்குது?“ என நக்கலாக சாரு அவனுக்கு மட்டுமே கேட்கும் தொனியில் கேட்டாள்

“யாருப்பா?” என கேட்டபடி வந்த பத்மாவதியும் “வாம்மா . .நல்லா இருக்கியா? உட்காரு” என உபசரித்தார்.

“நல்லா இருக்கேன்மா” என அமர்ந்தாள். பத்மாவதியின் பேச்சையும் புன்னகையும் கவனித்த சாரு அவருக்கு புகைப்படத்தை பற்றி ஆகாஷ் கூறவில்லை என கணித்தாள்..

“நான் உங்களோட கொஞ்சம் பேசணும்மா” என தயக்கமாக ஆரம்பித்தாள் சாரு.

ஓரக் கண்ணால் ஆகாஷை பார்த்தாள். அவன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் விருந்தாளியை உபசரிக்கும் பாவணையில் பத்மாவதி பின் பவ்யமாக நின்றிருந்தான்.

“சொல்லுமா என்ன விஷயம்?” பத்மா ஆர்வமாக கேட்டார்

“நீங்கதான் என்னோட உண்மையான அம்மா . . அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு.” என பொசுக்கென்று உண்மையை போட்டு உடைத்தாள். தன் ஹேண்பேக்கில் இருந்து அந்த புகைப்படத்தை எடுக்க  . . அது அவள் வைத்த இடத்தில் இல்லாமல் போகவே சற்று பதட்டமாக தேட ஆரம்பித்தாள்.

அவள் ஆகாஷை எதேச்சியாக பார்க்க அவன் வெற்றி புன்னகையுடன் அவளை பார்த்து கண்ணடித்தான். தன் கட்டை விரளை கீழ் நோக்கி காண்பித்து உன்னிடம் இல்லை என்பதைப் போல பாவணை செய்தான். ஏளன சிரிப்பு இப்பொழுது இடம் மாறியது.

சாருவிற்கு அவன் மேல் ஆத்திரம் எரிமலையாய் பொங்கியது.

இது எதையும் கவனிக்காத பத்மாவதி சாருவின் வார்த்தைகளால் இனம் புரியாத கலக்கத்திற்கு அதிர்ச்சிக்கும் ஆளானார்.

தொடரும் . .

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.