(Reading time: 25 - 49 minutes)

ஆனா இந்த தடவை அவ என்னை மட்டும் கூப்பிடல எங்க காலேஜ் புது ஆடிடோரியம் திறக்கின்ற பங்சனில் நாங்க பிரண்ட்ஸ் எல்லோரும் குரூப்பாக சேரி வாங்கறதா பினான் பண்ணிருக்கோம். மேலும் அதில் நான் பரதநாட்டியம் மட்டும் ஆடல பாட்டி, ஒரு குரூப் டான்ஸ் வேறு ஆடுறதா இருக்கு. அதற்கு வேறு காஸ்ட்யூம் வாங்கனும் என்று பிளான் செய்திருக்கிறோம்.

அதற்கு சந்தியா அவங்க ஜவுளிகடையில் இருந்து மொத்தமா ஜவுளிஎல்லாம் அவள் வீட்டிற்கே கொண்டு வரச் சொல்லியிருக்கா. அவங்க வீட்டில் என்றால் எல்லோரும் மொத்தமா போட்டுப்பார்த்து கம்மியான விலைக்கே வேண்டியதை பர்சேஸ் செய்திடலாம் என்று எங்க எல்லோருக்கும் சந்தியா ஐடியா கொடுத்தா. எங்கூட ஆடுற மத்த பிள்ளைகள் எல்லாம் சரின்னு சொல்றப்போ நான் மட்டும் வரலே என்று சொல்வது நல்லாவா இருக்கும். ப்ளீஸ்... ப்ளீஸ் பாட்டி இந்த ஒருதடவை மட்டும் என்னை போக விடுங்க.இனி இப்படி நான் கேக்க மாட்டேன் சரியா என்று கெஞ்சினாள்.

அப்பொழுது யாழிசையைதேடி பிருந்தா அவள் வீட்டிற்குள் அடி எடுத்துவைத்தபடி யாழி.... யாழி... என்று கத்தியபடி வந்தாள்

வானவராயர் அய்யாவின் மகள் பிருந்தாவின் வருகையில் உற்சாகமான யாழிசை. ஏய் பிருந்தாகுட்டி என்றபடி அவளை நாடிச்சென்றாள். பிருந்தாவின் சத்தம் கேட்டதும் அவளுக்கு பிடித்த முந்திரிகொத்து பலகாரத்தை எடுத்துத் தர பாட்டி உள்ளே விரைந்தாள்.

பாட்டி உள்ளே போவதை திரும்பி பார்த்தபடி ஓடிவந்து பிருந்தாகுட்டி முதல்ல நா சொல்வதை கேள், என்று பேசவந்த அவளின் வாயில் கைவைத்து அவளை பேசவிடாது செய்தாள்.

பிருந்தா இன்னைக்கு மதியம் என் பிரன்ட் சந்தியா வீட்டிற்கு என்னை கூப்பிட்டுபோக வருகிறாள். அவள் வீட்டிற்கு போய் எங்க காலேஜ் ப்ரோகிராம்கு காஸ்ட்யூம் செலக்ட் செய்ய போகிறோம். இப்போ என்னை கூப்பிட சந்தியா காரில் வருவாள் அவள் கூட என்னை அனுப்ப பாட்டியை நீ சம்மதிக்க வைத்துவிட்டால் அடுத்தவாரம் முழுவதும் நீ என்னசொன்னாலும் அதை நான் செய்கிறேன். ப்ளீஸ்... நீ சொன்னா பாட்டி என்னை விட்டுடுவாங்க பிருந்தாகுட்டி என் செல்லமுள்ள என்று கெஞ்சினாள் .

உண்மையாவே நான் பாட்டிகிட்ட பெர்மிசன் வாங்கி கொடுத்தா நான் சொல்றதை எல்லாம் நீ செய்வதானே ஏமாத்திட மாட்டியே யாழி? என்று கேள்விகேட்டாள் பிருந்தா.

காட் ப்ராமிஸ். நீ சொல்றதை எல்லாம் அடுத்தவாரம் செஞ்சு குடுக்கிறேன் பிருந்தா . நீ கேட்டால் மட்டும் இந்த ருக்மணி பாட்டி எதையும் மறுத்து சொல்ல மாட்டாங்க. வர வர எனக்கு அவுங்க பாட்டியா அல்லது உனக்கு பாட்டியானேன்னு எனக்கு சந்தேகமா ஆகிடுது. என் பாட்டிக்கு என்ன சொக்குப்பொடி போட்டியோ அதை எனக்கும் கொஞ்சம் சொல்லேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

கையில் பலகாரத்துடன் வந்த ருக்மணி பாட்டி யாழிசை கூறிய கடைசி வரிகளை மட்டும் காதில் வாங்கியவள் ம்....நீ நம்ம முதலாளி அய்யா வானவராயருக்கும் மகராசி வெள்ளையம்மாளுக்கும் என்ன சொக்குப்பொடி போட்டியோ அதையேத்தான் அவ எனக்குபோட்டுருக்கா என்று கூறினாள்

யாழிசை பாட்டி கையில் இருந்த பலகாரத்தட்டை பார்த்ததும் அதை எடுக்க கை நீட்டினாள்

அவள் கைக்கு எட்டாதவாறு அந்தப்பக்கம் தட்டை நகர்த்திய ருக்மணி பாட்டி உனக்கு உள்ள இருக்கு போய் எடுத்துக்கோ நான் இதை புள்ளைக்கு எடுத்துவந்திருகேன் என்றபடி நீ சாப்பிடு தாயி என்று பிருந்தாவிடம் அதை கொடுத்தால்

ஐ....முந்திரி கொத்து! எனக்கு புடிக்கும்னு தெரிஞ்சு எடுத்துட்டுவன்தீங்களா பாட்டி என்று கேட்டவாறு தட்டை கையில் வாங்கியவள் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்

அவள் சாப்பிடுவதை பார்த்தவாறு அமர்ந்த யாழிசையிடம் தட்டை நீட்டியபடி, இந்தா நீயும் எடுத்துக்கோ என்று நீட்டிய பிருந்தாவிடம் மெதுவா பாட்டிகிட்டகேளு என்று கூறினாள்.

உடனே பிருந்தாவும் யாழி உங்க காலேஜில் நீ உன் ப்ரண்ட்ஸ் கூட குரூப் டான்ஸ் ஆட போறதாவும் அதுக்கு எல்லோருக்கும் ஒரேமாதிரி ட்ரெஸ் வாங்க போறதா சொன்னீயே இன்னும் கிளம்பலையா? என்று கேட்டாள்.

அவள் கேட்டதும், யாழிசை அவளிடம் பாட்டி என்ன போக வேண்டானு சொல்லிட்டாங்க பிருந்தாகுட்டி என்று வருத்தத்துடன் கூறினாள்.

அவளின் வருத்தமான முகத்தை பார்த்ததும் என் யாழி வருத்தப்படலாமா? என்றவள், பாட்டி! ஏன் பாட்டி அவளை போகவேண்டானு சொல்கிறீர்கள். ப்ளீஸ் ப்ளீஸ் அவள் பத்திரமா போய் வந்திடுவாள் போன இடத்தில் சேட்டை செய்யாமல் சமத்து யாழியா வீட்டுக்கு வந்துடுவா .என்ன யாழி பத்திரமா வந்துடுவ தானே. பாட்டி உன்ன போக சரின்னு சொல்லிட்டாங்க பாரு முகத்தை சிரித்ததுபோல் வச்சுக்கோ உன் அழுமூச்சியை பார்க்க சகிக்கல என்றாள்.

பத்திரமா சமத்தா போய்ட்டு வந்துடுவேன் பிருந்தாகுட்டி நீ தான் பாட்டி சரின்னு சொல்லிட்டதா சொல்றியே நான் போய் கிளம்பப் போறேன் இன்னும் அரைமணி நேரத்தில் என்னை கூப்பிட சந்தியா வந்துடுவாள் என்றவள் கிளம்ப வேகமாக எழுந்து சென்றாள்.

இருவரும் தன்னை வைத்துக்கொண்டே தான் சம்மதம் கூறாமலேயே சம்மதம் கூறியதுபோல் சொல்லிவிட்டு அடுத்த சோலியை மேற்கொள்ளப் போவதைக் கண்ட ருக்மணி பாட்டி, நான் எப்போ தாயி அவளை போய்ட்டுவரட்டும் என்று சொன்னேன் என்று கேட்டதும், இதோ இப்போ இப்போ கூட அவளை போயிட்டு வரட்டும் என்று நீங்க சொன்னீங்களே பாட்டி என்று கூறினால் பிருந்தா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.