(Reading time: 18 - 35 minutes)

என்ன பேசவென தெரியாமல் அவள் வெறித்திருக்க நியாபகம் வந்தவனாய் காருக்குள் இருந்து ஒரு டிபன் பாக்ஸை எடுத்து வந்து அவளை தூக்கி கல் பெஞ்சில் அமர்த்தினான்.

“பாட்டி உனக்கு பிடிச்ச பால் பாயாசம் செஞ்சு குடுத்தாங்க சாப்ட்டுடே பேசணும் ஓ.கே?”,என்றவன் குழந்தைக்கு கொடுக்க அவள் அதை சாப்பிட்ட வாறே திஷானியை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டு அபினவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ப்பா என் ப்ரெண்ட்ஸெல்லாம் என்னோட நல்லா விளையாடுறாங்க தெரியுமா!எனக்கு கீதா தான் ரொம்ப பிடிச்ச ப்ரெண்ட் அவ என்கூடவே தான் இருக்கா..என்னோட தான் தூங்குறா..ஜாலியா இருக்குப்பா..”

“அப்படியா பேபி..வெரிகுட் அப்போ அப்பா வரலனாலும் நீ ஜாலியா தான் இருந்துருக்க..சரி அம்மா வந்துட்டாங்களே நீங்களும் என்னோட வீட்டுக்கு வந்துறீங்களா?”

இரு நிமிடம் திஷானியையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் என்ன தோன்றியதோ,”இல்லப்பா நா இங்கேயே இருக்கேன் இங்க தான் எனக்கு இவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.ஆன்ட்டி இருக்காங்க..நா உங்களோட வந்துட்டா எல்லாரும் ரொம்ப கவலை படுவாங்க தான..அதான் உங்க கூட அம்மா இருக்காங்களே..நா வந்துட்டா அப்புறம் கீதாக்கு யாருமே இருக்க மாட்டாங்க..அதனால தான் சொல்றேன்..நீ குட் பாய் தான நா சொன்னா கேட்பல..”

“ம்ம் அப்போ உனக்கு இங்க இருக்க தான் பிடிச்சுருக்குனா அப்பா இப்படி அடிக்கடி வந்து உன்னை பாத்துக்குறேன்.எப்போ பேசனும்னு தோணிணாலும் எனக்கு கால் பண்ணி பேசு சரியா..”

“ம்ம் சரிப்பா..ஆமா அம்மா ஏன் எதுவுமே பேச மட்றாங்க..என் மேல கோவமா இருக்காங்களா?”என பாவமாய் கேட்டவளை பார்த்தவளுக்கு மனதை அடைத்துக் கொண்டு வந்தது இருந்தும் பேச நா எழாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ம்ம் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லடா கண்ணா அதான் டயர்டா இருக்காங்க..”

“அச்சசோ என்னாச்சு காய்ச்சலா?ஊசி போடலையா?”,என அவள் கழுத்தில் கைவைத்துப் பார்க்க அடக்கியதையும் மீறி திஷானி கண்கலங்கிவிட்டாள்.

“ம்ம் ஊசி போட்டாச்சுடா செல்லம்..அடுத்த தடவை உன்னை பார்க்க வரும் போது நல்லா பேசுவாங்க சரியா..இப்போ டைம் ஆய்டுச்சு நீங்க போய் விளையாடுங்க அப்பா அப்பறமா வந்து உன்னை பாக்குறேன் சரியா”

“சரிப்பா பை..”,என அவனை இழுத்து கன்னத்தில் இழ்பதித்து விடுவித்தவள் திஷானியையும் இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

“டாடா அம்மா..அழாத அடுத்த தடவை வலிக்காம ஊசி போட சொல்லலாம் சரியா..”என்று அவளுக்கு சமாதனம் கூறியவளை வீல் சேரில் அழைத்துச் சென்றார் அந்த பெண்மணி.

அவள் செல்லும் பாதையை பார்த்திருந்தவன் ஒரு பெரு மூச்சோடு திஷானியின் அருகில் அமர்ந்தான்.

திஷானி அமைதியாகவே இருப்பதை கண்டவன் அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“என் பிறந்தநாளுக்கு எப்பவுமே ஆசிரமத்துக்கு ஒரு வேளை சாப்பாடு பொறுப்பு எடுத்துப்பாங்க அம்மா.இங்க தான் இப்படி தான்னு இல்லாம பிறந்தநாளுக்கு முந்தின நாளே ஹோட்டல சாப்பாடு சொல்லி வச்சுருவோம்.மறுநாள் காலைல கோவிலுக்கு போய்ட்டு தோணுற ஏரியாவுக்கு போவோம் அங்க கண்ல படுற ஆசிமத்துக்கு போய்ட்டு சாப்பாடை அங்க டெலிவர் பண்ண சொல்லிட்டு கொஞ்ச நேரம் அவங்களோட இருந்துட்டு வந்துருவோம்.

அப்படி ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்தபக்கம் வந்தப்போ இங்க வாசல்ல ஒரே கூட்டமா இருந்தது.என்னனு தெரியலையேனு நாங்க மூணு பேரும் உள்ளே வந்து பாத்தப்போ பிறந்து ஒரு பத்து நாள் கூட ஆகாத ஒரு குழந்தையை வார்டன் கையில வச்சுருந்தாங்க..

விசாரிச்சதுல இந்த குழந்தையை யாரோ துணில கட்டி இங்க வாசல்ல போட்டுட்டு போயிருக்காங்க பெண் குழந்தை கால் வேற சாதாரணமா இருக்குற மாதிரி தெரிலனு பேசிட்டு இருந்தாங்க..

குழந்தையை பாத்தப்போ ஒரு நிமிஷம் மனசு உடைஞ்சு போச்சு அத்தனை குட்டியா கண்கூட ஒழுங்கா திறக்காத ஒரு குட்டி தேவதை மாதிரி இருந்தா.என்ன மனுஷங்க இவங்க எல்லாம் இந்த குழந்தையை தூக்கி போட எப்படி மனசு வந்ததுனு ஆத்திரமா வந்தது.

ஒண்ணுமே யோசிக்காம அம்மாகிட்ட சொன்னேன் ம்மா நாம அடாப்ட் பண்ணிக்கலாம் இந்த குழந்தையைனு..

அம்மா அப்பா சுத்தி இருந்தவங்கனு எல்லாருமே அதிர்ச்சியா என்னை பாத்தாங்க.அம்மாவும் அப்பாவும் என்கிட்ட பேச அதுகுள்ள வார்டன் கூட்டத்தை கலைச்சுட்டு எங்களை கூட்டிட்டு வந்து இதோ இதே பெஞ்சில உக்காந்து தான் பேசினாங்க..”

“யாரு நீங்க?எதுக்காக இங்க வந்துருக்கீங்க?”

“மேம் என் பேரு அபினவ் இன்னைக்கு என் பர்த் டே அதான் இங்க பசங்களுக்கு லஞ்ச்க்கு அரேண்ஞ் பண்ணலாம்னு வந்தோம்.”

“நல்லது..ரொம்பவே நன்றி..ஆனா அது மாதிரி இந்த குழந்தையை தத்தெடுக்குறது ஒண்ணும் அத்தனை ஈசியான விஷயம் இல்ல தம்பி..”

“மேம் எனக்கு தெரியும் உங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல சோ நா லீகல் கார்டியனா ஆக முடியாது..பட் அப்பா அம்மா பேர்ல ப்ரொஸீட் பண்ணுங்க..நா இவளை நல்ல படியா பாத்துப்பேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.