(Reading time: 18 - 35 minutes)

ஆன்சைட் முடிச்சு வந்தப்பறம் கொஞ்ச மாசதுக்கு நா இங்க வரவேயில்ல.அவ என்னை மறந்துருப்பா அவளை அப்படியே இருக்க வைக்குறது தான் நல்லதுனு முடிவு ண்ணிணேன்.

அதுக்கப்பறம் தான் உன்னை பார்த்தது.உன்னோட அந்த போல்டான முகமும் உன் அட்டிட்டூம் ரொம்பவே மனசுல பதிஞ்சுடுச்சு.அகல்யா எப்படி என்னை ஆக்கிரமிச்சாளோ அப்படிதான் இன்னதுனு சொல்ல முடியாத ஒருவித ஈர்ப்பு உன்கிட்ட வந்தது.எனக்கே எனக்கா பத்திரமா வச்சுக்க வேண்டிய எனக்கான பொம்மை நீ அப்படிதான் உன்னை நினைச்சேன்.

நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி தான் மறுபடியும் இங்க அவளை பார்க்க வந்தேன்.எல்லா குழந்தையையும் மாதிரி அவகிட்டயும் பேசிட்டு போலாம்னு வந்த எனக்கு அவ கொடுத்த அதிர்ச்சி,”அப்பானு கத்தி என்னை கட்டிபிடிச்சுகிட்டா..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கிட்டதட்ட இரண்டு வருஷம் பாக்காம இருந்தும் அவ மனசுல இத்தனை ஆழமாய் பதிஞ்சுருக்கேனா அந்த ஒரு பீல் என்னால என்னனு சொல்ல முடில அவளோட அவ்ளோ பேசினேன்..அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் கொஞ்ச நாள் உன்னை பார்க்க வர மாட்டேன்னு வெளிப்படையா பிரிவை சொல்லிட்டே போனேன்.

ஆனா அவ எதுக்குமே அசையல பாத்தியா இன்னைக்கும் எப்படி எந்த ஒரு வித்தியாசமும் இல்லாம என்கிட்ட வர்றா..

இந்த அன்புதான் என்னை ரொம்பவே உறுக வச்சது திஷாம்மா..கல்யாணம் பிக்ஸ் ஆனப்பறமும் சரி உன்னோட காதலை நீ உன்னை அறியாம எனக்குள்ள பதிச்ச அப்பறமும் சரி குழந்தையை பத்தி நா யோசிக்கல தான் நிச்சயமா ஆனா அன்னைக்கு பாண்டிச்சேரில நீ உன்னையறியாம குழந்தையை பத்தி பேசினப்போ தான் முதல் தடவையா தோணிச்சு அகல்யா என்னை விட்டு போனாலும் மறுபடியும் என் மகளாவே வந்து பிறப்பானு.

அந்த வார்த்தைல தான் நான் தடுமாறினது அதன் காரணமா தான் உன்னை மாதிரியே ரெண்டு குழந்தைங்க வேணும்னு சொன்னதும்.ஆனா அதுக்கு நீ அப்படி ஒரு அர்த்தம் எடுத்துப்பனு அப்போ நா நினைக்கல..

எல்லாத்தையும் தாண்டி சாரு நீ கர்ப்பபமா இருக்கனு சொன்னப்போ எப்படியிருந்தது தெரியுமா ஏதோ உலகத்தையே சாதிச்ச ஒரு பீல்..உன்னை ஸ்கூல வச்சு பாத்துருந்தேன்னா அப்படியே தூக்கி முகம் மொத்ததையும் முத்தத்தால நினைச்சுருப்பேன்.எல்லாமே மாறிப் போச்சு திஷாம்மா..”

அனைத்தையும் அவன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென கனவிலிருந்து மீண்டவனாய்,”ச்ச நா பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டே இருக்கேன்.சாரி பேபி..கண்டிப்பா இதெல்லாம் உன்கிட்ட ஒருநாள் சொல்லிருப்பேன் ஆனா இந்த நிலைமையில உன்னை கஷ்டபடுத்த வேண்டியதா போச்சு..தப்பா எடுத்துக்காத..”

“இல்லங்க..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..இதை நீங்க கல்யாணம் ஆனவுடனே சொல்லிருந்தா என்னோட அந்த தேவையில்லாத பயம்கூட வந்துருக்காதோனு தோணுது.என் புருஷன் அபினவையே அத்தனை பிடிக்கும் எனக்கு..ஆனா இப்போ அகல்யாவோட அப்பாவ சொல்ல முடியாத அளவு பிடிச்சுருக்கு..அவருக்காகவே சந்தோஷமா இந்த குழந்தையை பெத்தெடுத்து அழகா வளர்க்க போறேன்..

நீங்க எனக்காக செஞ்ச செய்துட்டு இருக்குற அத்தனைக்கும் என்னால திருப்பி செய்ய முடிஞ்ச ஒரே விஷயம் இதுமட்டும் தான்.ஆனாலும் அகல்யா பாப்பாவ வேற டாக்டர் யார்கிட்டையாவது காட்டலாமேங்க..”

“இல்லடா எல்லார்கிட்டயும் கன்சல்ட் பண்ணியாச்சு இதுக்கு மேல அவ பிரிவை ஏத்துக்குற பக்குவத்தை நாம வளர்த்துக்குறத தவிர வேற வழியில்லை..சரி நீ அதையே நினைச்சுட்டு இருக்காத..உன்னை தெளீவுபடுத்த தான் இவ்ளோ விஷயமும் சொன்னது..கடவுள் முடிஞ்சவரை அவளை காப்பாத்தட்டும்.ரொம்ப லேட் ஆச்சு போலாம் திஷாம்மா..”,என்றவன் எழுந்து தன்னவளோடு கிளம்பினான்.

தொடரும்...

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.