(Reading time: 18 - 35 minutes)

“மிஸ்டர் அபினவ் ரிலாக்ஸ் ..நீங்க சொல்றது மட்டும் காரணம் இல்ல..இந்த குழந்தையை பத்தி ஸ்டேஷன்ல டீடெயில் வாங்கிருக்காங்க.இங்க இந்த குழந்தையை கொண்டு வந்தது உண்மையான அம்மா அப்பாவா இல்ல இந்த குழந்தையை எதுக்காகவாவது திருடிட்டு வந்து இங்க போட்டுருக்காங்களா?இந்த மாதிரி எதுவுமே தெரில.

அப்படியிருக்க நீங்க அடாப்ட் பண்ணி எடுத்துட்டு போய் நாளைக்கே எதாவது ப்ரச்சனை வந்தா கோர்ட் கேஸ்னு அலையணும் இதெல்லாம் உங்களுக்கு தேவையா?அதுவும் போக உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நாளைக்கே உங்க மனைவியா வர்றவங்களுக்கு இந்த குழந்தையை பிடிக்காம போச்சுனா அப்போ என்ன பண்ணுவீங்கக..”

“நீங்க சொல்ற எல்லாமே கரெக்ட் தான் மேம்..இருந்தாலும்..”

“அபினவ் நீ எமோஷனலா பேசுற..கொஞ்சம் பொறுமையா யோசிச்சா தான் உனக்கும் சரி அந்த குழந்தைக்கும் சரி எத்தனை பிரச்சனைகள் இருக்குனு புரியும்..கம் டவுண் டா”என ராகவன் அவனை அமைதிப்படுத்த சாரதா மெதுவாய் அந்த குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டார்.

ராகவன் ஏதோ கூறிக் கொண்டேயிருக்க அபினவின் கண்கள் மொத்தமாய் அந்த குழந்தையிடமே நிலைத்திருந்தது.பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வார்டனிடம்,

“மேம் இதை நா ஏதோ எமோஷனலா எடுக்குற முடிவுனு நினைக்க வேண்டாம்.யோசிச்சு தான் டிசைட் பண்ணிருக்கேன்.அந்த குழந்தையை நா அடாப்ட் பண்ணிக்க முடியாத பட்சத்துல நா அவளுக்கான ஸ்பான்சரா பொறுப்பு எடுத்துக்குறேன்.எப்படியும் இவளுக்கு ட்ரீட்மெண்ட் செலவு இருக்கும்”,என்றவாறே அந்த பிஞ்சு கால்களை வருடினான்.

என்னா முடிஞ்ச அளவு இவளுக்கான அத்தனை செலவும் பண்ண தயாரா இருக்கேன்.அதுக்கு என்ன ப்ரொசிஜரோ சொல்லுங்க ப்ளீஸ்..”

அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் அவர் அலுவலகத்திற்குச் செல்ல அபினவ் தன் தாய் தந்தையிடம்,

சாரிப்பா சாரிம்மா உங்களை கேட்காம இதை செய்றது தப்புதான்.ஆனா ஏன்னு தெரில இந்த குழந்தையை இப்படியே விட முடில.நாம எத்தனையோ ஆசிரமத்துக்கு போய்ருக்கோம் தான் ஆனா இப்படி ஒரு நிலைமைல இப்படி ஒரு குழந்தையை பாத்ததே இல்லையே ம்மா..ரொம்ப கஷ்டமா இருக்கு..இவளுக்காகவே கல்யணம் பண்ணிப்பேன்ப்பா..என் குழந்தையா இவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்..நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க தான?”

“அபினா இதுல எங்க முடிவை விட உனக்கு வாழ்க்கை துணையா வர போறவளோட முடிவு தான்ப்பா முக்கியம்.அதனால கண்டத போட்டு குழப்பாம இப்போதைக்கு இந்த குழந்தைக்கு ஸ்பான்ஸரா மட்டும் இரு..”,என்று கூறி அவனை பெரியவர்கள் அழைத்துச் சென்றனர்.

பின் சாரதாவையே பெயர் வைக்குமாறு அபினவ் கேட்க அகல்யா என்று பெயர் சூட்டினார்.

அன்றிலிருந்து அவனின் வார இறுதிகளில் மூன்று மணி நேரம் அகல்யாவிற்கு என்றானது..சாரதாவும் அவனோடு வந்து விடுவார்.

இப்படியாய் இருந்த நாட்களில் அகல்யாவின் 45வது நாளில் போட வேண்டிய தடுப்பூசிக்காக அவளை மருத்துவமனைக்கு தானே அழைத்துச் செல்வதாய் கூறி சாரதாவோடு அழைத்துச் சென்றான்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர் அபினவையும் சாரதாவையும் தயக்கமாய் பார்த்தார்.

“என்னாச்சு டாக்டர்??”

“குழந்தைக்கு ஹார்ட்ல ப்ராப்ளம் இருக்குமோனு டவுட் மிஸ்டர் அபி..”

“என்ன சொல்றீங்க டாக்டர்!!”

“ம்ம் புல் செக் பண்ணிட்டு சொல்றேன் வெயிட் பண்ணுங்க..”

அதன்பின் கடந்த ஒரு மணி நேரமும் அபினவிற்கு மனம் நிலையில்லாமல் தவித்தது..மருத்துவர் வந்து விஷயத்தை கூறும் போது மொத்தமாய் தளர்ந்து தான் போனான்.

“மிஸ்டர் அபி நான் சொன்ன மாதிரி ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் தான் ஒரே வழி அதுவும் அவளுக்கு ஒரு மூணு வயசாவது பூர்த்தி ஆகணும்..அதுக்கப்பறம் அவ ப்ளட் குரூப் மேட்ச் ஆகுற ஹார்ட் கிடைக்கணும்.அப்பறம்தான் பண்ண முடியும்..அதுவரை அவளை..”

“நா பத்திரமா பாத்துக்குறேன் டாக்டர்..”,என்றவன் அத்தோடு வெளியே சென்றுவிட்டான்.

வார்டனிடம் விஷயத்தை கூறிவிட்டு அமைதியாய் வீட்டிற்கு சென்றுவிட்டான்.சாரதாவிற்கோ அவனின் மனவோட்டத்தை கணிக்கவே முடியவில்லை.வீட்டிற்கு சென்றதும் அவனை கட்டாயப்படுத்தி தன் மடியில் சாய்த்துக் கொள்ள மெதுவாய் வாய் திறந்தான்.

“ம்மா சில நேரங்கள்ல கடவுள் ஏன் இத்தனை கொடூர முகத்தை காட்றாரு..அந்த சின்ன பூவுக்கு இத்தனை கஷ்டங்கள் தேவைதானா?”

“கண்ணா..நம்மை மீறின விஷயங்கள் இதெல்லாம்..நம்மாள முடிஞ்ச உதவி செஞ்சு அந்த கடவுளை வேண்டிக்குறத தவிர எந்த வழியும் இல்ல டா..”

இப்படியாய் வருடங்கள் ஓட அவளது இரண்டரை வயதில் ஒருநாள் அவளை பார்க்கச் சென்ற அபினவிடம்,”நீ ஏன் எப்போவாவது தான் என்கூட இருக்க?உனக்கு இது வீடு இல்லையா?நா உன்னை எப்படி கூப்பிடனும்னு?”மழலை மாறாமல் கேள்விகளை அடுக்க அனைத்தையும் ஒதுக்கி கடைசி கேள்விக்கு மட்டும் பதில் அளித்தான் அப்பானு கூப்பிடு செல்லம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.