அதன் பிறகு அபினவ் அவளுக்கு எல்லாமுமாய் மாறிப் போனான்.அடுத்த சில நாட்களில்,
“என்னை ஏன் இங்கேயே விட்டுட்டு போற..உன்னோட கூட்டிட்டு போக மாட்டியா?நான் உன் கூடவே இருக்கேனே..”
“அகல்யா குட்டிக்கு இங்க நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தான அப்பா வேலைக்கு போய்டுவேன் நீ என் கூட வந்தா உனக்கு போர் அடிக்குமே அப்பா காலைல போனா நைட் தான் வருவேன்.அதனால தான் உன்னை உன் ப்ரெண்ட்ஸ் கூடவே தங்க வச்சுருக்கேன் செல்லம்..”
அகல்யாவை பார்க்கும் நேரமெல்லாம் திருமணம் செய்து மனைவியோடு சேர்ந்து அவளை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணம் மேலோங்கும் ஆனால் வர்ற மனைவி இதை ஏத்துக்காம போய்டா என்ற எண்ணம் பின்னாடியே வந்து அவனை சோர்வு படுத்திவிடும்.
இப்படியாய் வருடங்கள் உருண்டோட இன்று திஷானியோடு இங்கு வந்திருப்பது அவனுக்கு கனவு போல் தோன்றியது.
“திஷாம்மா உன்னை முதல் தடவை பாத்தப்போவே ஏன் பிடிச்சதுனு கேட்டல உன் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு இல்ல நாளைக்கே என் அகல்யாவும் வளர்ந்தா உன்னைமாதிரி ஒருநல்ல நிலைமைல இருப்பாதானனு எனக்கு தோணிணதுனால தான்.
என்னை அறியாம என் மனசுக்குள்ள வந்த ரெண்டு பொண்ணுங்க ஒண்ணு நீ இன்னோன்னு அகல்யா தான்.ஏன் எதனாலனு எல்லாம் தெரில டா..உன்கிட்ட இதை மறைக்கணும்னு நினைக்கல இதை நீ எப்படி புரிஞ்சுப்பனு ஒரு பயம்..இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிருவியோனு ஒரு தயக்கம்..
சரி கொஞ்ச நாளுக்கு அப்பறம் சொல்லுவோம்னு நினைச்சுருந்தேன் அப்பறம் உன் பயத்தை பத்தி சாரு சொன்னப்போ மொத்தமாவே இதை உன்ட்ட சொல்லாம விட்றணும்னு முடிவு பண்ணிட்டேன்..”,என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.
“அவ்ளோ மோசமா நினைச்சுட்டீங்களா அபிப்பா?!!”கதற துடித்த மனதை உதடு கடித்து நிறுத்தினாள்.
தன் தோள் சாய்த்துக் கொண்டவன் நீண்ட பெரு மூச்சோடு தன் பேச்சை தொடர்ந்தான்.
“இல்ல டா அப்படி நினைக்கல..உலகத்துக்கு வராத குழந்தையை பத்தியே இத்தனை கவலை படுறவ நமக்கு ஒரு குழந்தை இருக்குனு சொல்லி அவ எப்போ வேணா நம்மளை விட்டு கடவுள்கிட்ட போய்டுவானு எப்படி சொல்ல சொல்ற?”
“என்னங்க???!!!!”
“ஆமா டா..அவ ரொம்ப வீக்கா இருந்ததால சர்ஜரி பண்ண முடில அது மட்டுமில்லாம கரெக்ட் டைம்ல அவளுக்கு ஏத்த ஹார்ட் கிடைக்கல ஷி இஸ் கவுண்டிங் ஹெர் டேஸ்..
அதனால தான் உன்கிட்ட சொல்லல..அவ விஷயத்துல இருந்தே என்னால இன்னும் மீண்டு வர முடில இதுல நீ வேற அபார்ஷன் அது இதுனு எனக்கு இதை தவிர உனக்கு புரிய வைக்க வேற வழி தெரில அதனால தான் இங்க வந்ததே..இப்போ சொல்லு என் பொண்ணு ஒருத்தியை நா தொலைக்க போறது பத்தாதா இப்போ இன்னொரு குழந்தை முகத்தை கூட பாக்காம அதையும் தொலைக்கணுமா??
கண்ணால பாக்குற தான அவ குறையையும் மீறி அவ எத்தனை சந்தோஷமா இருக்கா என்கிட்ட..நம்ம பிள்ளையையும் நா அதே மாதிரி பாத்துப்பேன் டீ..எந்த சூழ்நிலையிலையும் நீயும் நம்ம குழந்தையும் தான் டீ என் வாழ்க்கை என் உயிர்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ திஷாம்மா..”,என்றவனின் குரல் அடைத்து கண்களில் நீர்கோர்க்க அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“இல்லங்க நா ஏதோ லூசுதனமா யோசிச்சுட்டேன்.இனி மறந்தும்கூட அப்படியெல்லாம் யோசிக்க மாட்டேன்.ப்ளீஸ் நீங்க எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்குறவருனு நினைச்சுட்டு இருந்தேன்.. எனக்கு உங்களோட இந்த கலக்கம் பதற வைக்குது..ப்ளீஸ் கம் டவுண்..”
சற்றே தன்னை தேற்றியவன்,”ம்ம் பல நேரங்கள்ல ரொம்பவே ஜாலியா இருக்குறவங்க தான் அதிகமா உடைஞ்சுருவாங்க அது என் விஷயத்துலயும் உண்மை திஷாம்மா..அகல்யா எப்படி எனக்குள்ள இத்தனை பாதிப்பை குடுத்தானு இப்போ வரையுமே எனக்கு தெரில.அவளை காப்பாத்த முடியாதுனு சொன்னப்பறம் நா நானாவே இல்ல.
ரொம்பவே ஏதோ ஒரு டிப்ரஷன்..அதுக்கப்பறம் அம்மா அப்பாவும் வார்டன் ஆன்ட்டியும் சேர்ந்து என்னை இங்க வரவிடாம பண்ணிணாங்க.அகல்யாவை நா பார்க்க கூடாதுனு என்னவெல்லாமோ பண்ணி ஒன் இயர் ஆன்சைட் போக வச்சு அங்க கிடைச்ச தனிமை வாழ்க்கையை நிறையவே புரிய வச்சுது.இந்த உலகத்துக்கு வர்ற எல்லாருமே என்னைக்கோ ஒரு நாள் கண்டிப்பா போகத்தான் போறோம்.அகல்யா அதுல கொஞ்சமே முந்திக்குறானு புரிஞ்சுது..
அம்மா கால் பண்ணும் போதெல்லாம் அவங்க கஷ்டத்தையும் பயத்தையும் மறைச்சு பேசுவாங்க அப்போ ஒவ்வொரு செகண்டும் மனசு நொந்துடும் இப்படி கஷ்டப் படுத்துறோமேனு..என்னை நானே பழைய அபினவா மீட்டு எடுத்தேன்.அப்பா அம்மாக்கு நல்ல புள்ளையா இருக்கணும்னு முடிவு செஞ்சேன்.
எல்லாத்தையும் கடந்து ஆசிரமத்தின் மத்த பிள்ளைங்க மாதிரி தான் அவளும்னு கஷ்டப்பட்டு மனசை சமாதானப்படுத்தினேன்.