இரவு உணவு உண்டபின் தன் தம்பி தங்கையுடன் கொஞ்சநேரம் வம்பு இழுத்துவிட்டு படுத்தால் அலைந்த கலைப்பில் அப்படியே உறங்கி விடுவாள்.. மறுநாள் காலையில் அவள் எழுமுன்பே அவளின் வேலைகள் அலாரம் வைத்து எழுந்து அவள் முன்னே நிக்கும்...நிற்க நேரம் இல்லாமல் எப்பொழுதும் சுத்திக்கொண்டே இருப்பாள்...
பள்ளி நாட்களில் அவளின் தோழிகள் கன்னி பருவத்தில் வந்த கனவுகளை பற்றி பேசி கொண்டிருக்கும் பொழுது இவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.. இப்படியெல்லாம் கூட கனவு வருமா என்று..
தனக்கு ஏன் அந்த மாதிரி கனவு எதுவும் வருவதில்லை என்று யோசித்திருக்கிறாள்....
“கனவு எல்லாம் சும்மா... அவளுங்களே கனவு கண்ட மாதிரி கதை விடறாளுங்க “ என்று எண்ணிக்கொண்டே தன் வேலையை தொடர்வாள்
அப்படி வளர்ந்தவளுக்கு இன்று புதிதாக கனவு வரவும் அவளால் அதை பொய்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரதி.. என்று கத்தி கொண்டிருந்தார்.....
மெதுவாக தன்னை சுதாரித்து கொண்டவள் ரிசிவரை எடுத்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்...
“என்னாச்சு பாரதி... நான் பயந்தே போய்ட்டேன்... “
“ஒன்னும் இல்லை அத்தை...லைன் சரியா கிடைக்கலை போல... அப்புறம் என்ன கேட்டீங்க??? “ என்று சமாளித்தாள்...