உத்ராவின் நிலை இறுதலைக் கொள்ளி எறும்பாய் போனது. பரத்திடம் இருந்து அவளையே அவள் விலக்கிகொள்ள முடியும் என்றுதோன்வில்லை, புதைகுழி என்று தெரிந்தும் அவனின் அருகாமை இனித்தது. தானும் நீரஜாவைப் போல ஆகிவிடுமோயென்று பயம் கொண்டது மனது. உறக்கம் தொலைத்த விழிகளோடு கட்டிலில் அமர்ந்தாள்.
தன் அறைக்கு வந்த ப்ரியன் கணிப்பொறியின் திரையை உயிர்ப்பித்தான். ஒவ்வொரு போல்டராக திறக்க நீரஜா என்ற பெயரில் உள்ள பைலைத் திறந்தான். நீரஜா கட்டிலின் மையப் பகுதியில் பார்வைக்கு கிடைத்தாள். மேற்கொண்டு காட்சிகள் நகர நகர ப்ரியனின் கண்கள் விரிந்தன.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
தன் கைபேசியின் அழைப்பை கவனித்து சொல்லுங்க நான்தான் பேசறேன்
என்ன செய்யறே
நீரஜாவைப் பார்த்துட்டு இருக்கேன்
செத்துப்போனவளை எத்தனை முறை பார்ப்பே ? எப்படியோ போய் தொலை தப்பு செய்றவன் ஆதாரத்தை கூடவே வச்சிக்கிட்டு சுத்தக் கூடாது ப்ரியன். நம்ம வேலை எப்படி போகுது பரத் என்ன சொல்றான்.
அவன் ஒரு முட்டாள், எதற்காக இந்த வேலைன்னு தெரியாமயே நமக்கு உதவிசெய்யறான். யுரேனியம் உருகும் நிலை அடைஞ்சிருக்கு மிஷனையும் உள்ளே அனுப்பியாச்சு கொஞ்ச கொஞ்சமா பவளப்பாறைகள் வளர ஆரம்பிக்கும் நம்முடைய யுரேனியமும் உருகிட தொடங்கும் அதற்குண்டான குழாய்களை எல்லாம் ஏற்கனவே பதிச்சாச்சு, எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு யாருக்கும் சந்தேகம் இல்லாம, இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம தயார் பண்ண ராட்ஸ மீன் இன்னைக்குதான் தலையைக் காட்டியிருக்கு, முன்னைவிடவும் ரொம்பவே ஆக்ரோஷமா.... நான் உனக்கு வீடியோ அனுப்பிவிடறேன் பாரு. அப்புறம் நீயெப்ப இங்கே வர்றே ?
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் .... ஏன் ஏதும் விசேஷமா
ம்..போன முறை நீரஜா மாதிரி இந்தமுறை இரண்டு பேர் இருக்காங்க நமக்கு விருந்தாக.....மொபைலை ஆப் செய்துவிட்டு மீண்டும் நீரஜாவிடம் பார்வையைச் செலுத்தினான் ப்ரியன்.
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}