(Reading time: 19 - 37 minutes)

பார்த்தாச்சு சார் நாட் ரீச்சபில் என்று வருது . அவன் வீட்டு நம்பருக்கும் முயற்சி செய்து கேட்டுட்டேன் அவங்க நேத்து காலையில் காலேஜ் வந்தவன் அதன் பின் வீட்டிற்கே வரவில்லை என்று கூறுகிறார்கள் என்றார்.

அவர் கூறியதை கேட்டவர் இது யோசிக்கக்கூடிய விசயம்தான் இருந்தாலும் இப்பொழுது அதை நம்மால் விசாரிக்க முடியாத இடத்தில் இருக்கிறோம். இப்போ பங்சன் ஆரம்பிச்சுடும் அதை நல்லா நடத்துறதுக்கு இப்போ வழியை பார்ப்போம்.

இன்னைக்கு ப்ரோகிராமில் கலந்துகொள்பவர்கள் எல்லோரையும் மொத்தமாக லாபியில் ஆஜர் ஆகச்சொல்லுங்க எம்.இ ஸ்டூடன்ட் ஜெயகுமாரை வரச்சொல்லுங்க. மிதுனனின் இடத்தில் அவனை வைத்து உடனே ப்ரோகிராமை அரேஞ் செய்ங்க. வேகமா வாங்க நானும் கூட வருகிறேன் என்று ப்ரின்சியும் லாபிக்கு விரைந்தார்.

லாபிக்கு வந்தவர்கள் எல்லோரையும் ஆஜர் படுத்தி சந்தியாவிடம் மிதுணன் கொடுத்த டீடைல்ஸ் வைத்து டிஸ்கஸ் செய்தவர்கள் இப்பொழுது யாழிசை வராததை கண்டு  அடுத்த டென்சனுக்கு ஆளாகினர்.

பின்பு போன வருடம் ஆனுவல் பங்சனில் யாழிசைக்கு அடுத்து ஆடிய மற்றொரு பெண்ணை அழைத்து அவளுக்கு தெரிந்த ஏற்கனவே அவள் ப்ராக்டீஸ் செய்துவைத்திருந்த பரதத்துடன் நிகழ்ச்சி துவங்க முடிவெடுக்கப்பட்டது.

சந்தியாவிற்குத்தான் இருப்பே கொள்ளவில்லை. அவளின் தோழி யாழிசையின் மொபைலில் அவளை தொடர்பு கொள்ள முயன்றவளுக்கு நாட் ரீச்சபிள் என்ற பதிலே திரும்ப திரும்ப கிடைக்கவும் யாழிசையின்  வீட்டு எண்ணுக்கு போன் செய்து பார்த்தாள். அவளின் தந்தை அவள் காலேஜிற்கு காலையிலேயே புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறியது சந்தியாவின்  மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

யாழிசையின் தந்தை கனேசப்பிள்ளையை அப்பொழுது சமாதானப்படுத்த நான் கிளாசுக்கே இன்னும் போகல அப்பா அவள் கிளாசில் இருக்கலாம் நான் போய் பார்த்துகிடுறேன் என்று உளறி கிண்டி மூடி மொபைலை அனைத்துவைத்தாள்.

மிதுணன் இருந்தாலாவது அவனிடம் யாழிசையை தேடி தரச்சொல்லி கேக்கலாம். ஆனால் அவனையும் காணோம் என்று இங்கு தேடிகொண்டுதானே இருக்கிறார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்தவளிடம் வந்த அவளின் தோழி,

என்னடீ இப்படி திடீர்னு யாழிசை வராமல் காலை வாரிட்டா?  எப்படியாவது நம்ம டான்சை அவள் இல்லாமல் மேனேஜ் செய்து ஆடி முடிக்கணும். இருக்கட்டும் நாளைக்கு அவள் வரட்டும்  அப்போ இருக்கு அவளுக்கு என்று கூறியவளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்த சந்தியாவை ஊன்றி பார்த்தாள்.

அவள் கலக்கமாக இருப்பதை பார்த்தவள் ஏய்... என்னடி பிரச்சனை, ஏன் ஒருமாதிரி இருக்க என்று கேட்டாள் .

அதன் பின் சந்தியா அவளிடம், யாசிகா நான் சொல்வதை இப்போ யாரிடமும் நீ சொல்லிவிடாதே உண்மை எதுவென்று சரியாக தெரியாமல் நாம் இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளகூடாது ஆனால் என்னமோ எனக்கு கலக்கமாக இருக்குதுடி என்றாள்.

அவள் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சொன்னதை கேட்டவள், நீ என்ன அவுக எப்படிவேனாலும் கேப்பாக... அடிச்சுக்கூட கேப்பாக... ஆனா நான் என்னசொன்னேனு கேட்டா எதுவும் சொல்லிராத. அடிச்சுகூட கேப்பாக அப்படியும் சொல்லிராத அப்படின்னு  வடிவேலுகிட்ட விஷயத்தை சொல்லாமல் சுத்தலில் அந்த தவள வாய்காரன் விட்டதுபோல சொல்ற என்று கேட்டாள்.

அவள் சொன்ன ஜோக்கை கேட்டு ரியாக்ட் செய்யாமல் நீ வேற நேரங்கெட்ட நேரத்தில் லந்து பண்ணிக்கிட்டு இருக்க. நானே யாழிசையின் அப்பா, அவள் காலையிலேயே காலேஜ் கிளம்பி வந்துட்டா என்று சொன்னதை கேட்டு. மணி பதினொன்னு ஆகிடுச்சு இன்னும் அவள் வரலையே  என்று கவலையில். யாரிடம் போய் சொல்ல என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இதோ ப்ரோகிராம் வேறு ஸ்டார்ட் அக போகுது அதில் யாழ்  காணோம் என்ற டென்சனில் அதில் என்னால் கான்சன்ரேட் செய்யமுடியாமல் இருக்கிறேன் என்றாள்.

அவள் கூறியதை கேட்ட யாசிகா, என்னது! யாழிசை கிளம்பிவந்துட்டதாக அவங்க அப்பா சொல்றாங்களா? அப்போ நிஜமாவே அவள காணோமா? ஏய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மிதுனனையும் காணோம் என்று பேசிக்கொள்கிறார்கள். ஒருவேளை இரண்டுபேரும் எஸ் ஆயிட்டாங்களோ....? ஏற்கனவே மிதுனனின் கண் நீங்க இரண்டுபேர் இருக்கிற இடத்தையே சுத்தும். யாரை அவன் பிராக்கெட் போட்டிருக்காணு தெரியாமல் நாங்க குழம்பி போய் இருந்தோம். இப்போ யாழிசை மற்றும் மிதுனன்  இரண்டு பேரையும் காணோம் என்றாள் அவள்தானா மிதுனனின் சாய்ஸ் என்று அந்த நேரத்திலும் வம்பு பேசினாள்.

அவள் சொன்னதை கேட்டு கடுப்பான சந்தியா, அடச் சீ... வாயை மூடு. யாரைப்பார்த்து எஸ் ஆயிட்டாங்கலானு கேக்கிற .

நீ நினைக்கிரமதிரி ஓடிப்போகிற ஆளுங்க கிடையாது அவங்க இரண்டு பேரும். யாழிசை அவுங்க அப்பாவுக்கு தலைகுணிவு வருகிறமாதிரி எந்த  செயலையும் எப்போதும் செய்யமாட்டா. மிதுனனும் கோழையாக காதலித்தவளை வீட்டிற்கு பெண் கேட்டுப்போய் முறையா மணக்காமல் இலுத்துட்டுபோற ஆளும் கிடையாது .எனக்கென்னவோ இருவருக்கும் ஏதோ ஆபத்தோ என பயமா இருக்குது என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.