(Reading time: 19 - 37 minutes)

அவள் அவ்வாறு கூறியதும் எதை வைத்து டீ நீ அவங்களுக்கு ஆபத்து என்று சொல்ற என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் சந்தியாவால் தனது மனதில் உள்ளதை வெளியில் வெளிப்படையாக சொல்லமுடியாத துக்கத்தில் ஆழ்ந்தாள்.

தலை பாரமாக அழுத்த கண் இமை கணக்க எழுந்து அமர்ந்த யாழிசை தான் புதிதாக உள்ள இடத்தில் தன்னை உள்வாங்கி இருந்த மென்மையான மெத்தையின் ஸ்பரிசத்தில் தன்னிலை உணர்ந்தவள் தான் காரில் தீரமிகுந்தனால் கடத்தப்பட்டது நினைவிற்கு வந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

துப்பாக்கியை தனது  நெற்றியில் வைத்து அவன் மிரட்டவும் ஒருநிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடமே சுடப்போரியா சுடு துப்பாக்கிக்கு பயந்து ஒன்றும் நீ சொல்வதற்கு அசைந்துகொடுக்கமாட்டேன் என்று கூறினாள்.

அவளின் கண்களில் பயம் இருந்தாலும் அதை மறைத்து தன்னிடம் வாயாடும் அவளின் இந்த புது அவதாரத்தை தீரன் அந்த நிலையிலும் ரசிக்கவே செய்தான். ஆனாலும் மறுநிமிடமே அவளை கோழிக்குஞ்சை அமுக்கும் பருந்துபோல் தனது கைவளைவிற்குள் கொண்டுவந்தவன் ஒரு கர்சீபினை அவளின் மூக்கில் அழுத்தினான்

அதில் இருந்த மயக்க மருந்தினை அவள் தம் கட்டி சுவாசிக்காமல் அடக்குவதை புரிந்துகொண்ட தீரன் அவளை அப்படியே இரண்டு எட்டு இழுத்து கொண்டு காரின் அருகில் போய் அவளுடன் காரில் ஏறினான்.

காரில் முன்பு ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவன் வேறு தேசத்தவன் என்று அவனின் உருவம் அடையாளம் காட்டியது.

அவர்கள் இருவரும் ஏறியபின்பு கார் வேகமெடுத்தது. தீரனோ அவளை தன்னுடன் அனைத்தமாதிரி பிடித்தவன் அவள் முகத்தில் வைத்திருந்த கர்சீப்பை பத்து நிமிடம் விடாமல் அவளிம் மூக்கின் அருகிலேயே வைத்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பின் அவளால் தம்பிடிக்க முடியாமல் அந்த மருந்தை சுவாசித்தவள் மயக்கத்திற்கு சென்றாள்.

அதுவரை அவளை அனைத்து பிடித்திருந்த தீரன் அவளிடம் சாரி பேபி . பர்கிவ் மீ. ஐ ஹேட் மை செல்ப். உன்னை நானே கஸ்ட்டப்படுத்துவதை நினைத்து என்னை எனக்கே பிடிக்காமல் போய்விட்டது என்று கூறுவது மயங்கிகொண்டிருந்த அவளின் மூளையில் அவனின் புலம்பல் பதிவாகியிருந்ததை இப்பொழுது அவளின் நினைவடுக்கு அவளிடம் ஞாபகப்படுத்தியது.

கண்விழித்தவள் இரவாகிவிட்டதை உணர்ந்து திடுக்கிட்டாள். காலையில் தன்னை பாட்டி அவ்வளவு தடுத்தும் கேளாமல் இப்படி வந்து மாட்டிக்கொண்டேனே.  என்னை காணாமல் அப்பாவும் பாட்டியும் தவித்துவிடுவார்களே.

அய்யோ என்று தலையில் கை வைத்தவள். அவன் என்னிடம் வம்பிழுத்த முதல் தடவையே  அய்யாவிடம் அவனை பற்றி கம்ப்ளைன்ட் செய்யாத தனது முட்டாள் தனத்தை நினைத்து இப்பொழுது வருந்தினாள்.

அவள் இருந்த படுக்கை அறையின் மெதுவாக லம்பியபடி எழுந்து வந்து கதவை திறந்து பார்க்க முயன்றாள் ஆனால் அது பூட்டப்படிருந்தது.

வேகமாக ஜன்னலின் அருகில் சென்று திறந்து பார்க்க நினைத்தாள் .ஆனால் அவள் நுகர்ந்த மயக்க மருந்தின் வீரியத்தினாலோ என்னவோ தலை சுற்றியது. அதை பொருட்படுத்தாது முன்னேறியவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சுவற்றை பிடித்து எரிந்துகொண்டிருந்த இரவு விளக்கின் ஒளியில் அருகில் இருந்த சுவற்றை பிடித்து நடந்தவளின் கண்ணில் ஒரு கதவு தெரிந்தது அதை திறந்ததும் அது பாத்ரூம் என்று தெரிந்ததும் அவள் அடக்கிகொண்டிருந்த வாமிட் அவளையும் மீறி வெளிவந்தது பாத்ரூமின் வாசலில் நின்றபடி வாமிட் செய்துகொண்டிருந்தவளின் காதில் கதவு திறக்கும் ஒலியோ அதை தொடர்ந்து உள்ளே வந்த உருவத்தையோ அவளின் உடல் சோர்வின் காரணமாக உணரமுடியாமல் போனது.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.