தம்பி பாரத் பிறந்தது அவ்வளவாக நினைவு இல்லை என்றாலும் தங்கை இந்திரா பிறந்தது அவளுக்கு நன்றாகவே நினைவு இருந்தது... அவள் வயிற்றில் உருவான நாள் ல இருந்தே அவள் அம்மா சோர்ந்து சோர்ந்து படுப்பதும் அதுக்கு அவள் தந்தை அவரை நடக்க கூட விடாமல் தாங்கியதும் நினைவு வந்தது..
அதுவும் பிரசவத்தின் பொழுது பாரதியும் கூடவே மருத்தவமனையில் இருந்தாள்... நாலாவது பிள்ளைதான என்று அசால்ட்டாக இல்லாமல் தன் அன்னையின் வலி உணர்ந்து தன் தந்தையும் துடித்தது அவளுக்கு இன்னும் நினைவு இருந்தது...
அவள் மனம் ஏனோ அவளையும் அறியாமல் அந்த மாதிரி ஒரு அரவணைப்பை எதிர்பார்த்தது இப்பொழுது...
பொதுவாக முறையாக திருமணம் செய்து கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவர்களுக்குள் அன்பையும் காதலையும் பரிமாறி பின் தாம்பத்யத்தில் திலைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சிறிது நேரம் கண் அயர்ந்தவள் அவள் அருகில் யாரொ அமரும் சத்தம் கேட்டு கண் விழித்தாள்...
ஜானகி தான் அமர்ந்து இருந்தார்...
“என்னாச்சுடா பாரதி?? என்ன என் பேத்தி ரொம்ப படுத்தறாளா ?? “ என்று மலர்ந்த சிரிப்புடன் அக்கரையாக விசாரித்தார் ஜானகி... அதைக் கண்டதும் பாரதியின் முகம் மலர்ந்தது